Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடம்பெயர் தொழிலாளர் மரணங்களைப் போல விவசாயிகளின் தற்கொலை விவரங்களும் இல்லை- கைவிரிக்கும் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்கள் இல்லை என ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், கொரோனா லாக்டவுன் காலத்தில் இறந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, லாக்டவுன் காலத்தில் இறந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களே இல்லை.

No Data On Farmer Suicides, says Centre in Rajya Sabha

அப்படி என்கிற போது இழப்பீட்டுத் தொகை குறித்து கேள்வியே எழவில்லை என்றது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படைகளில் இறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய அரசு, நாட்டில் நடப்பாண்டில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற விவரமும் இல்லை என தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

மேலும், தேசிய குற்றப் பதிவு ஆணையத்துக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய அறிக்கைகளில் விவசாயிகள் தற்கொலை குறித்த விவரங்கள் குறிப்பிடவில்லை எனவும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்திருக்கிறது மத்திய அரசு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+