சீனா அத்துமீறலை விலாவாரியா விவரிச்சாரே ராஜ்நாத்சிங்.. ஆனா 6 மாதமாக ஊடுருவலே இல்லை என்கிறது உள்துறை!
டெல்லி: இந்தியா - சீனா எல்லையில் இந்தியாவுக்குள் கடந்த ஆறு மாதங்களில் எந்தவித ஊடுருவலும் இல்லை என்று இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா சீனா எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்தியாவுக்கு உள்பட்ட இடத்தை சீனா ஆக்கிரமித்து இருந்தது. இதை நேற்று பகிரங்கமாக ராஜ்நாத் சிங் ஒப்புக் கொண்டு இருந்தார். சுமார் 38.000 சதுர கி. மீட்டர் தொலைவுக்கான இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். இத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலப்பரப்பை ஆக்கிரமித்து சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வார்த்து இருந்தது குறித்தும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றார். இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்து இருக்கும் பதிலில், ''இந்திய சீனா எல்லையில் இந்தியாவுக்குள் கடந்த ஆறு மாதங்களாக எந்தவித ஊடுருவலும் இல்லை. சீனாவுடன் நீண்ட நாட்களாக இந்தியா எல்லை மோதலில் ஈடுபட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லோக்சாபாவில் விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நேற்று அழுத்தம் கொடுத்தன. காங்கிரஸ் வைத்திருந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் நேற்று வெளிநடப்பு செய்து இருந்தது.
Recommended Video
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications