Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை.. விவசாயிகளுக்கு திட்டங்களும் இல்லை.. திருச்சி சிவா விமர்சனம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை என்று திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகளையும், இளைஞர்களையும் பாதுகாக்க மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்காக எதுவும் கொடுக்கவில்லை என்று விமர்சித்த திருச்சி சிவா, தேர்தலை மையப்படுத்தியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 5வது முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் டெல்லியில் செய்தியாளர் சந்தித்து திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், இந்தியாவை வேலையில்லா திண்டாட்டம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. 65% இளைஞர்களை கொண்டிருக்கும் இந்தியாவில், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு எந்த அறிவிப்புகளும் இல்லை.

நிதிநிலை அறிக்கை

நிதிநிலை அறிக்கை

அதேபோல் வேளாண் தொழில் இந்தியாவுக்கு மிக முக்கியம். இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், கொரோனா பரவலில் இருந்து இந்தியா மீண்டது பற்றியும், உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதை இந்தியா சமாளித்தது பற்றி பேசினார். அதற்கு இரு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, இந்தியாவில் உணவு துறையில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் தான் காரணம். ஆனால் அந்த வேளாண் தொழிலை பராமரிக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகள்

விவசாயிகள்

உணவுத்துறையில் நாம் தன்னிறைவு பெற்றிருப்பது அரசினால் அல்ல. இந்தியா இயல்பாகவே விவசாய நாடு. அதன் மூலம் பொருளாதாரமும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் அதிகமாக தருவது விவசாயமும், சிறு குறு தொழில்களும் தான். இவை இரண்டையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு உயர்ந்து கொண்டு இருக்கிறது. அவர்களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்பது பாஜகவின் தேர்தல் அறிக்கை.

தேர்தல்

தேர்தல்

கிட்டத்தட்ட பாஜகவின் ஆட்சி 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அனேகமாக இதுதான் அவர்களின் கடைசி நிதி நிலை அறிக்கை. இந்த நேரத்தில் விவசாயிகளையோ, இளைஞர்களையோ பாதுகாக்க எந்த அறிவிப்பும் இல்லை. கர்நாடகாவுக்கு கொடுத்ததில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் ஏன் தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியும் அறிவிக்கவில்லை. கர்நாடகாவிலும் தேர்தல் என்பதாலேயே சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, தேர்தலை மையமாக வைத்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

மானியங்கள் குறைப்பு

மானியங்கள் குறைப்பு

அதேபோல் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கு செலவு செய்தது மிகக்குறைவு. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி, ஊட்டச்சத்திற்கு அடிப்படையாக தரப்படும் மானியம், உணவுத்துறை நிறுவனங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏழைகள், அடிப்படை தேவையை நிறைவேற்ற முடியாமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் இருக்கிறார்கள், பெண்கள் வாழ்வாதாரம் ஆகியவற்றை பற்றியே நிதிநிலை அறிக்கையில் பேச வேண்டும். ஆனால் அதனைப் பற்றி நிதிநிலை அறிக்கை பேசவில்லை.

வருமான வரி குறைப்பு

வருமான வரி குறைப்பு

விவசாயிகளின் எந்த குரலும் கேட்கப்படவில்லை. அதேபோல் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் கூட தனியாருக்கு விற்கப்படுகின்றன. இந்த அரசின் திட்டங்கள் தனியாருக்கு ஆதாயமாக இருக்கின்றன. வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனில் பெரும்பகுதி பெருமுதலாளிளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏழை, எளிய விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் சிறிய அளவே வழங்கப்படுகிறது. இந்த அரசு பொதுமக்களின் நலனில் கருத்தில் கொள்ளாமல் உள்ளது. சில அறிவிப்புகள் மக்களை கவர்வதை போல் இருக்கலாம். அது தேர்தலை கவனத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டவை. குறிப்பாக வருமான வரிக் குறைப்பு முகப்பூச்சு.

விலைவாசி

விலைவாசி

இந்த நிதிநிலை அறிக்கை இளைஞர்கள், விவசாயிகளை, சிறு குறு தொழில் முனைவோர்களை, ஏழைகளை, பெண்கள் குறைகளை தீர்க்கும் நிதிநிலை அறிக்கையாக இல்லை. இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் 1 சதவிதத்தினரால் கையாளப்படுகிறது. பொருளாதாரத்தில் 5வது இடம் என்று சொல்லும் போது கவர்ச்சியாக இருக்கும். சராசரி மக்களின் ஆடம்பர தேவையாக இருந்தவை, இன்று அடிப்படை தேவையாக மாறிவிட்டது. அவற்றின் விலையை கட்டுப்படுத்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதனை இந்த அரசு செய்யவில்லை.

தமிழ்நாட்டிற்கு ஒன்றும் கொடுக்கவில்லை

தமிழ்நாட்டிற்கு ஒன்றும் கொடுக்கவில்லை

தமிழ்நாட்டிற்கு என்று பட்ஜெட்டில் எதுவும் கொடுக்கவில்லை. மதுரை எய்ம்ஸ்-க்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. ஏற்கனவே செவிலியர்கள் படிப்படை முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்கு கஷ்டங்களை சந்தித்து வரும் செவிலியர்களுக்கு கண்ணியமான ஊதியத்தில் வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+