மக்களே பீதி வேண்டாம்.. இந்தியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை! அறிவித்த அறிவியல் மையம்
டெல்லி: ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ள. பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுனாமி வார்னிங் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் விழுந்தன. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை சுனாமி தாக்கியது. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹெக்கைடோவின் கடலோர பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின.
ரஷ்யா - ஜப்பான் மட்டுமின்றி பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நம் நாட்டுக்கும் சுனாமி பாதிப்பு வருமா? என்ற பீதி ஏற்பட்டது. ஆனால் நம் நாட்டுக்கு எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த நிலநடுக்கம் தொடர்பாக இந்தியாவிற்கும் இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை. முன்னதாக சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் இன்று அதிகாலை 4.54 மணிக்கு கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க அண்டை நாடான சீனாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் சுனாமி எச்சரிக்கை மையம் தரப்பில், ‛‛தேசிய வள அமைச்சகத்தின் சுனாமி அறிவுரை மையம் சார்பில் சமீபத்திய எச்சரிக்கை மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் ஆராயப்பட்டன. அதன்படிசீனாவின் சில கடலோர பகுதிகளிலும் சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது'' என சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications