Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களே பீதி வேண்டாம்.. இந்தியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை! அறிவித்த அறிவியல் மையம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ள. பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுனாமி வார்னிங் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.

no-tsunami-threat-to-india-says-incois-after-russia-and-japan-affected

இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் விழுந்தன. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை சுனாமி தாக்கியது. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹெக்கைடோவின் கடலோர பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின.

ரஷ்யா - ஜப்பான் மட்டுமின்றி பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நம் நாட்டுக்கும் சுனாமி பாதிப்பு வருமா? என்ற பீதி ஏற்பட்டது. ஆனால் நம் நாட்டுக்கு எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த நிலநடுக்கம் தொடர்பாக இந்தியாவிற்கும் இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை. முன்னதாக சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் இன்று அதிகாலை 4.54 மணிக்கு கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க அண்டை நாடான சீனாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் சுனாமி எச்சரிக்கை மையம் தரப்பில், ‛‛தேசிய வள அமைச்சகத்தின் சுனாமி அறிவுரை மையம் சார்பில் சமீபத்திய எச்சரிக்கை மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் ஆராயப்பட்டன. அதன்படிசீனாவின் சில கடலோர பகுதிகளிலும் சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது'' என சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+