முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு இல்ல.. தலைநகர் டெல்லி இல்ல! வர்ணாசிரம ஆட்சி -இந்து தேச வரைவு
டெல்லி: இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கக்கோரி இந்து ராஷ்டிர அரசியலமைப்பு வரைவை இந்துமத துறவிகள் மற்றும் அறிஞர்கள் குழுவை சேர்ந்தவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவை இந்து ராஷ்டிராவாக அறிவித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளை ஒரே நாடாக அறிவித்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என இந்துத்துவா தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்தியாவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் பல தருணங்களில் பேசி இருக்கிறார்கள். அரியானா மாநில பாஜக எம்எல்ஏ கோயல் இந்து ராஷ்டிரம் அமைப்பேன் என்று உறுதிமொழி எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இனப்படுகொலை
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் இந்தியா ஓர் இந்து தேசம் என்றும், அது குறித்த விவாதத்திற்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் நடைபெற்ற தர்ம சன்சாத் சாமியார்கள் மாநாட்டிலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதற்கு தயாராக வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்து ராஷ்டிரம்
இந்த நிலையில் இந்து மத துறவிகள், வழக்கறிஞர்கள், அரசியல் அறிஞர்கள் ஒன்றிணைந்து இந்து ராஷ்டிரத்துக்கான (இந்து நாடு) அரசியலமைப்பு வரைவை தயாரித்து இருக்கிறார்கள். இந்த இந்து ராஷ்டிர அரசியலமைப்பு வரைவினை வெளியிட்டு இருக்கும் குழுவினர் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

வாக்களிக்கும் உரிமை
இந்த அரசியலமைப்பு வரைவில் இடம்பெற்று இருக்கும் முக்கிய அம்சங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா இந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்து ராஷ்டிரத்தின் தலைநகர்
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாதாரண மக்களாக வாழலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்து ராஷ்டிரத்தின் தலைநகராக டெல்லி இருக்காது என்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆன்மீக நகரான வாரணாசியே இந்தியாவின் தலைநகர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வர்ணாசிரம் தர்ம ஆட்சி
மேலும், ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அகற்றப்பட்டு வர்ணாசிரம தர்மப்படி இந்து ராஷ்டிரத்தில் ஆட்சி நடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாரணாசியில் இந்து மத அமைப்புகள் நடத்தும் தர்ம சன்சாத் கூட்டத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டு விரிவாக விவாரிக்கவும், மக்களிடம் கருத்து கேட்கவும் முடிவு செய்து இருக்கிறார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications