போலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி
Recommended Video
டெல்லி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, மாணவனாக இருந்த காலத்தில் கல்லூரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று 10 நாட்களை டெல்லி திகார் சிறையில் கழித்தவர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது..
நோபல் பரிசு வென்ற அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் ஆவார். இவர் பிஏ பொருளாதாரம் படிப்பை கொலகத்தாவில் உள்ள பிரசிடன்சி பல்கலைக்கழகத்தில் படித்தார்.
முதுகலை படிப்பை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அபிஜித் பானர்ஜி படித்தார். இதையடுத்து ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தார்.

மாணவர்கள் கைது
இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அவர் படித்த காலத்தில் இருந்தே போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. 1983ம் ஆண்டு புதிய மாணவர் சேர்க்கை கொள்கைக்கு எதிராக டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தரின் வீட்டில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அப்போது மாணவர் சங்க துணை தலைவரை வெளியேற்ற போலீசார் முயற்சித்த போது கைகலப்பாகி உள்ளது. அப்போது மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போலீஸ் தடுத்து நிறுத்தி, அவர்களை தாக்கி டெல்லி திகார் சிறையில் அடைத்தது.

திகார் சிறையில் அடைப்பு
அப்போது நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அபிஜித் பானர்ஜியும் போலீசார் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். 10 நாட்கள் சிறையில் இருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். அப்போது போடப்பட்ட வழக்குகளும் கைவிடப்பட்டு இருக்கிறது.தன் மீது போடப்பட்ட வழக்கு சிறையில் இருந்த தகவலை ஆகியவற்றை 2016ம் ஆண்டு ஆங்கில நாளிதழக்கு அபிஜித் பானர்ஜியே பேட்டி அளித்துள்ளார்.

அரசியல் சாராதவர்
இதனிடையே சீனியர் மாணவர்களில் ஒருவரும், எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் மூத்த ஆசிரியருமான டி.கே.அருண் அபிஜித் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை என்றும் தனது நினைவலைகளை பகிரந்து கொண்டிருக்கிறார்.

நோபல் பரிசு வென்றார்
திகார் சிறையில் இருந்து விட்டு வந்து நோபல் பரிசு பெற்றவர் என்றால் அது அபிஜித் பானர்ஜி தான் என்று அருண் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அப்ஜித் விநாயக் பானர்ஜி, அவருடைய மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கெல் க்ரெமர் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications