லடாக் போர்முனை - 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம்
டெல்லி: 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின்னர் லடாக் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் உருவாகி உள்ளது.
Recommended Video
லடாக் எல்லை இப்போது சீனா- இந்தியா இடையேயான போர் முனையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. லடாக்கின் கால்வின் பள்ளத்தாக்கை சீனா ஏற்கனவே கடந்த காலங்களில் போர் களப் பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளது.

லடாக் கால்வின் பள்ளத்தாக்கு
தற்போதும் இதே பகுதிகளில்தான் சீனா வாலை ஆட்டிக் கொண்டு நிற்கிறது. இந்திய எல்லைக்குள் 3 கி.மீ. தொலைவுக்கு சீனா ஊடுருவி இருக்கிறது என்கிறது சில தகவல்கள். அதேநேரத்தில் இந்திய நிலைகளில் இருந்து 10 முதல் 15 கி.மீ. தொலைவில் இன்னொரு பக்கம் முகாமிட்டு நிற்கிறதாம் சீனா படைகள்.

படைகள் குவிப்பு இடம்
எல்லையில் சீனா தாம் சொல்லுகிற எல்லைகட்டுப்பாட்டு கோட்டு பகுதியில்தான் படைகளை குவித்திருக்கிறது என சொல்கிறது. ஆனால் செயற்கைக்கோள் வரைபடங்களை ஆராயும் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், பொதுவான எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதியில்தான் சீனா தமது படைகளை ஊடுருவ செய்திருக்கிறது என்கின்றனர்.

ராணுவம் குவிப்பால் பதற்றம்
இந்திய நிலையான KM120 -ல் இந்தியா ஏற்கனவே 250 வீரர்களைக் கொ ண்ட குழுவை முகாமிட வைத்திருக்கிறது. இப்பகுதியில் மேலும் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். இதனால் 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின்னர் லடாக் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன.

எங்கே ஊடுருவினாலும் அடி
இப்பகுதியில் மட்டும் அல்லாது, சீனாவுடனான அனைத்து எல்லைப் பகுதிகளிலும் நமது ராணுவம் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா ராணுவம் ஒரு அங்குலம் முன்னேறி ஊடுருவ முயற்சித்தாலும் பதிலடி தருவது என்பதில் நமது ராணுவம் உறுதியுடன் களத்தில் இருக்கிறது என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications