வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களே... உங்களை மீட்க கூடுதலாக 58 விமானங்கள் அறிவிப்பு
டெல்லி: வளைகுடா நாடுகளில் கொரோனா பாதிப்பு, பொது முடக்கம் காரணமாக தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்காக கூடுதலாக 58 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது வந்தே பாரத் மிஷனின் 3-வது கட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் 107 விமானங்களை இயக்க திட்டமிட்டிருந்த மத்திய அரசு , அதன் எண்ணிக்கையை 165 ஆக உயர்த்தி உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புதன்கிழமை தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் உள் நாட்டு விமான சேவைகள் தொடங்கி உள்ளது. ஆனால் வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்கவில்லை.
ஆனால் அதேநேரம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் அதிக விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மே 7 ஆம் தேதி தொடங்கிய இந்த பயணத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் 70,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்பி வந்துள்ளனர், கிட்டத்தட்ட 17,000 பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் கூறியுள்ளார்.
வளை குடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக 107 விமானங்கள் இயக்க திட்டமிட்ட மத்திய அரசு இப்போது கூடுதலாக 58 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதாவது 165 விமானங்கள் வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் என்று என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications