ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ10 லட்சம்: மத்திய அரசு
டெல்லி: ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
கொல்கத்தா ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் உருக்குலைந்து சேதமடைந்தன.
கோரமண்டல் ரயில் விபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 350 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்; படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ2 லட்சம்; லேசான காயமடைந்தோருக்கு ரூ50,000 வழங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். அத்துடன் விபத்து நடந்த இடத்துக்கு விரைவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications