Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதி வேண்டும்.. மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு அபிநவ் பிந்த்ரா ஆதரவு.. பாஜக எம்பிக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று டெல்லி ஜந்தர் மந்நதரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மூன்றாவது முறையாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பொறுப்பு வகித்து வந்திருக்கிறார். அதுபோல இவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரு சிறுமி உட்பட மல்யுத்த வீரர்களாக பயிற்சி பெறும் இளம் வீராங்கனைகள் பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாக சக வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஜனவரி மாதமே இந்த குற்றச்சாட்டு பெரியதாக வெடித்தது.

Olympic gold medalist Abhinav Bindra supports the struggle of wrestlers

பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு ஆதவாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சகாஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இதன் தொடர்ச்சியாக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வீரர்/வீராங்கனைகள் புகாரை தெரிவித்தனர்.

அவர்கள் இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி மீண்டும் வீரர்கள் டெல்லியில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. டெல்லி காவல்துறையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

ஆனால் தற்போது வரை எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே வீரர்கள் உச்சநீதிமன்றத்தை நாட்டியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விளக்கம் கேட்டு டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற போராட்டத்தில் அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்த வீரர்கள் இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினரின் ஆதரவை நாடியுள்ளனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் வீரர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.

அதேபோல கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்/வீராங்கனைகளுக்கு ஆதரவளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "விளையாட்டு வீரர்களாக சர்வதேச அரங்கில் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு இருக்கையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் துன்புறுத்தலுக்கு எதிராக வீரர்கள் போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

வீரர்களின் பிரச்னைகள் கவனமாக கேட்கப்பட்டு அவை நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த பிரச்னை தீர்க்கப்படுவதன் மூலம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அனைத்து வீரர்களும் பாதுகாப்பான சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+