"இழப்பு என்பது போரின் ஒருபகுதி".. ரபேல் விமானம் பற்றிய கேள்விக்கு ஏர் மார்ஷல் சொன்ன பதில்
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரஃபேல் போர் விமானத்தை நம்நாடு பறிகொடுத்ததா? என்ற கேள்விக்கு ஏர் மார்ஷல் ஏகே பாரதி, ‛‛இழப்பு என்பது போரின் ஒருபகுதியாக இருக்கும்'' என்று பரப்பான பதிலை அளித்துள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் பதற்றம் என்பது ஏற்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதையடுத்து ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணை வீசி தாக்கியது.

இதில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாதிகள் முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானும் பதிலுக்கு நம்மை தாக்க முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் என்பது தோற்கடிக்கப்பட்டது. நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து போர் நிறுத்தத்துக்கு நம் நாடு ஒப்புக்கொண்டது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், மேஜர் ஜெனரல் எஸ்எஸ் ஷர்மா, ஏர் மார்ஷல் ஏகே பாரதி, துணை அட்மிரல் ஏஎன் பிரமோத் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து விளக்கினர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் அதிகாரிகள் பதிலளித்தனர்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரபேல் போர் விமானம் வீழ்த்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஏர் மார்ஷல் ஏகே பாரதி, ‛‛நாம் போர் சூழலில் இருக்கிறோம். இழப்புகளும் அதன் ஒருபகுதியாகும். அதில் நாம் நமது இலக்கை அடைந்து விட்டோமா? என்பது தான். இதற்கான பதில் ஆம் தான். பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த நேரத்தில் நான் அதை பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனின் நாம் இன்னும் போரில் இருக்கிறோம். இதனால் எதிரிக்கு சாதகமான வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது. எங்கள் விமானிகள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்பிவிட்டனர்'' என்றார். ‛‛போர்சூழலில் இழப்புகள் ஒரு பகுதியாகவே இருக்கும்'' என்று மட்டுமே அவர் கூறிய நிலையில் கேட்ட கேள்விக்கு ஆம், இல்லை என்று நேரடியாக அவர் பதிலளிக்கவில்லை.
முன்னதாக நம் நாட்டின் ரஃபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு இருந்த நிலையில் ஏர் மார்ஷல் ஏகே பாரதி இப்படி பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications