Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் சிந்தூர்.. அதிரடி காட்டிய இந்திய ராணுவம்! குறி வைத்தது யாரை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். நீண்ட நாள் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான மசூத் அசாரை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால், அச்சம் அடைந்து இருக்கும் பாகிஸ்தான், எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

operation-sindoor-indian-army-takes-action-calculated-move-against-jaish-e-mohammads-strongholds

பாகிஸ்தான் மீது தாக்குதல்

இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அதே நேரம் பாகிஸ்தானும் சில ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

இந்தியாவும் ஏவுகணை சோதனை நடத்தியதுடன், போர் விமானங்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், இன்று அதிகாலை 1.44 மணிக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

யாரை குறி வைத்தது இந்தியா?

பாகிஸ்தானின் முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை குறிவைத்து இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ள பஹவால்பூரில் பல ஆண்டுகளாக பதுங்கியுள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு தாக்குதல்களுக்கு மசூத் அசார் மூளையாக செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கும் 2016 ஆம் ஆண்டு பதன்கோட் தாக்குதலிலுக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1999 கந்தஹார் விமான கடத்தலின் போது அசாத், இந்தியாவில் விடுவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ரணுவம் மற்றும் உளவு அமைப்புகள் அவரை பாதுகாத்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+