நாளை தேர்தல் ரிசல்ட்.. மாலையே அவசர மீட்டிங்.. பிரதமரை தேர்வு செய்ய பிளான்.. எதிர்க்கட்சிகள் முடிவு!
லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், நாளை மாலை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்த்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், நாளை மாலை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்த்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
லோக்சபா தேர்தல் கொண்டாட்டம் ஒரு வழியாக முடிந்துவிட்டது. இந்த இரவு கழிந்து விடிந்தால் தேர்தல் முடிவுகள் தெரிய தொடங்கிவிடும்.
நாளை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் இப்போதே பிரதமரை தேர்வு செய்ய களமிறங்கி உள்ளது.

நாளை கூட்டம்
அதன்படி நாளை மாலை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்த்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமயங்களில் பொதுவான ஹோட்டல் எதிலாவது கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

யார் எல்லாம்
மொத்தம் 22 கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிஜு பட்நாயக், சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

என்ன நோக்கம்
அதன்படி நாளை மாலையே எதிர்க்கட்சிகள் பிரதமரை தேர்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. நாளை தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக சாதகமாக வரும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால்தான் நாளை மீட்டிங் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

இன்னொரு கூட்டம்
இந்த கூட்டம் இல்லாமல் மே 24ம் தேதி இன்னொரு கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதில் புதிய மாநில கட்சிகளின் ஆதரவை எதிர்க்கட்சிகள் பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதன்பின் மே 24 மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications