களமிறங்கிய சோனியா காந்தி.. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் - திமுக எம்பிக்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சோனியா காந்தி, கனிமொழி, ஆ ராசா உள்பட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கண்டன போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் (குளிர்கால கூட்டத்தொடர்) நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து முதல் 2 நாள் நடவடிக்கையும் முடங்கியது.

opposition-leaders-protest-against-labour-laws-in-parliament-premises

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதுபற்றி விசாரிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் சபையை முடக்கினர். இதையடுத்து அதுபற்றி அடுத்த வாரம் விவாதிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதையடுத்து இன்று முதல் சபை நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால் காலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அது தொழிலாளர்களுக்கு எதிரானது. முதலாளிகளுக்கு சாதகமானது. இதனால் அதனை கைவிட வேண்டும் என்று கூறினர். இந்தபோராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ ராசா, தங்க தமிழ் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். இது நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+