இப்படியே போனா ஆட்சியை இழந்திடுவோம்.. வேகமாக செயல்படும் எதிர்க்கட்சிகள்.. பெரும் கலக்கத்தில் பாஜக!
லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே மாநில கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தயாராகி வருகிறது.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே மாநில கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தயாராகி வருகிறது. மாநில கட்சிகளின் வேகத்தை பார்த்து பாஜக கலக்கத்தில் இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று இருக்கிறது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே உள்ளது. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்த நிலையில்தான், எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதே திட்டமிட்டு வருகிறது. என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடல் மட்டுமில்லாமல் அதை செயல்படுத்தியும் வருகிறது.

ஒரு பக்கம் சந்திரசேகர ராவ்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்தான் இதில் முன்னிலையில் இருப்பது. அவர் மூன்றாம் அணியை உருவாக்குவதற்காக, மாநில தலைவர் ஒருவரை பிரதமராக்குவதற்காக இப்போதே, தென்னிந்திய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் போனில் பேசினார்.

இன்னொரு பக்கம் என்ன
இன்னொரு பக்கம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மே 21ம் தேதியை குறி வைத்து இருக்கிறார். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பிரதமரை தேர்வு செய்ய இவர் முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக அவர் 21 கட்சிகளிடம் பேசி உள்ளார். இந்த சந்திப்பு மே 21 நடக்க உள்ளது.

வேறு ஒரு கோணம்
அதேபோல் இந்த 21 கட்சிகளும் மே 23ம் தேதி குடியரசுத்தலைவரை சந்தித்து கடிதம் அளிக்க உள்ளனர். அதன்படி, லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், தனி பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க கூடாது, அதிக பெரும்பான்மை உள்ள கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டு என்று கோரிக்கை வைக்க உள்ளனர்.

பாஜகவிற்கு எதிரான நிலை
இந்த திட்டம் எல்லாம் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், என்ற ஒரு விஷயத்தை மட்டும்தான் மையமாக வைத்து செய்யப்படுகிறது. அதன்படி, பாஜக, காங்கிரஸ் அல்லாமல் மூன்றாம் கூட்டணியை அமைப்பது அல்லது காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது, என்ற இரண்டு திட்டங்களை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் செயல்படுகிறது. இதுதான் பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக கோபம்
தேர்தலுக்கு பின் மாநில கட்சிகளை தன்பக்கம் இழுக்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜகவிற்கு எதிராக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரு குடையில் கூடி வருகிறது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாஜக குழப்பத்தில் உள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications