மும்பையில் ஒன்றுகூடும் "இந்தியா!" ஆகஸ்ட் 25இல் ஆலோசனை! மேஜர் விஷயத்தை இறுதி செய்யும் எதிர்க்கட்சிகள்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்தாண்டு தான் நடைபெறுகிறது என்ற போதிலும் இப்போதே தேர்தலை மனதில் வைத்து அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தினர்.

அதன்படி பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே இரண்டாவது கூட்டம் கடந்த மாதம் பெங்களூரில் நடந்தது. இதில் தன் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயரிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அடுத்த கூட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, "இந்தியா" தனது அடுத்த கூட்டத்தை ஆகஸ்ட் 25-26 தேதிகளில் மும்பையில் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் நடந்த கூட்டத்தின் போதே, அடுத்த கூட்டம் மும்பையில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தேதிகள் இறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் ஆகஸ்ட் 25,26 தேதிகளில் இது நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் Common Minimum Programme எனப்படும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும் என தெரிகிறது. மேலும், மும்பையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கூட்டத்தின் கன்வீனர் யார் என்பது குறித்தும் இதில் முடிவாகும் என தெரிகிறது.

இந்த மும்பை கூட்டத்திற்கான பணிகளை சிவசேனா (யுபிடி) மற்றும் என்சிபியின் சரத் பவார் பிரிவு கவனித்து வருகிறது. முதல் இரண்டு கூட்டங்கள் நடந்த மாநிலங்களில் "இந்தியா" கூட்டணியில் இருக்கும் ஆட்சியில் இருந்தன. முதல்முறையாக பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் இடத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது.
பெங்களூர் கூட்டத்தில் "இந்தியா" என கூட்டணிக்குப் பெயர் வைப்பது தொடங்கி பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மிக பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. மும்பை கூட்டத்திலும் அதேபோல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications