பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து தொடரும் அமளி - 2 வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்ற மாநிலங்களவை 2 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு வார விடுமுறைக்கு பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று கூடியது. அவை கூடியவுடன் புதிதாக 6 மாநிலங்களவை எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பவித்ரா மார்கெரிடா, வங்ரா நர்ஜாரி, கேரளாவை சேர்ந்த ஜெபி மதர் ஹிஷாம், சந்தோஷ் குமார், ஏ.ஏ.ரஹீம், நாகாலாந்தை சேர்ந்த எஸ்.ஃபாங்னான் கோன்யாக் ஆகியோர் புதிய எம்.பிக்களாக பொறுப்பேற்றனர்.

அப்போது பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவின் இருக்கை அருகே அருகே சென்று எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் அவையை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையை 2 மணி வரை வெங்கய்யா நாயுடு ஒத்திவைத்தார்.
மறுபக்கம் நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக்கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களவை திமுக எம்.பி.க்கள் ஆளுநருக்கு எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications