Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியரசுத் தலைவரை சந்தித்து பேசிய ஓபிஎஸ் மகன்! ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவில் வட இந்தியர் தோற்றத்தில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத், அவருக்கு வீரமங்கை வேலுநாச்சியார் படத்தை பரிசாக அளித்திருக்கிறார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக் கூறிய ஓ.பி.ரவீந்தர நாத், அந்தச் சந்திப்பின் தனது தந்தைக்கு ஜெயலலிதா வழங்கிய முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியில் இருந்தால் அதிமுக கட்சி கரைவேட்டி கட்டுவதை பெரும்பாலும் தவிர்த்து, வட இந்தியர்கள் தோற்றத்திலேயே வலம் வரக் கூடியவர் ரவீந்தரநாத் என்பது கவனிக்கத்தக்கது.

ஓபிஎஸ் மகன்

ஓபிஎஸ் மகன்

அதிமுகவுக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கன்னு என்று கூறும் அளவுக்கு ஒரே ஒரு எம்.பியாக இருக்கக் கூடியவர் ரவீந்தரநாத். ஆனால் இவரை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால் அதன் மீது சபாநாயகர் ஓம் பிர்லா இதுவரை எந்த முடிவும் எடுக்காததை வைத்து பார்க்கும் போது மத்திய ஆட்சி மேலிடத்தின் பரிபூரண ஆசி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்துக்கு இருப்பதாகவே கருதப்படுகிறது.

Recommended Video

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி
    டெல்லியில் லாபி

    டெல்லியில் லாபி

    அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்குவதாக அறிவித்தது முதல் டெல்லியில் முகாமிட்டு தனது தந்தைக்காக அரசியல் லாபி செய்து வருகிறார் ரவீந்தரநாத். இவரது அரசியல் லாபி ஓரளவு ஒர்க் அவுட் ஆகிறது என்று கூட சொல்லலாம். இதனிடையே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த ரவீந்தரநாத், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

    வீர மங்கை வேலு நாச்சியார்

    வீர மங்கை வேலு நாச்சியார்

    மேலும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரமங்கை வேலு நாச்சியாரின் படத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் ரவீந்தர நாத் எம்.பி. அதிமுக கட்சி கரை வேட்டியை தவிர்த்துவிட்டு வட இந்தியர் தோற்றத்தில் ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவை அணிந்துக் கொண்டு ஜனாதிபதியை சந்தித்து பேசியிருக்கிறார் ரவீந்தர நாத்.

    எடப்பாடி தரப்புக்கு மெசேஜ்

    எடப்பாடி தரப்புக்கு மெசேஜ்

    பிரதமர் மோடியுடன் ஒன்றாக பேசிக்கொண்டே நடந்து செல்வது, குடியரசுத் தலைவருடன் அமர்ந்து பேசுவது போன்ற படங்களை வெளியிடுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஏதோ ஸ்ட்ராங் மெசேஜ் ஒன்றை கூற வருகிறார் ரவிந்திரநாத் என்பது மட்டும் நமக்கு புரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+