அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கிடையாது: மோடி திட்டவட்ட அறிவிப்பு
டெல்லி: நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக முடிவெடுக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அப்போது பல்வேறு வகை கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து அப்போது, மோடி கூறியதாவது: அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுதான் ராமர் கோயில் விவகாரத்தில் முடிவெடுப்போம் என்று பாஜக தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருந்தோம்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு, ஒரு அரசாக என்ன கடமையை செய்யவேண்டுமோ அதை செய்வோம். எல்லா வகை முயற்சியையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசால் ஏன் அவசர சட்டம் கொண்டுவர முடியாது? முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, "முத்தலாக் அவசர சட்டம் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கொண்டுவரப்பட்டது. அயோத்தி விஷயம் அப்படியானது கிடையாது.
கடந்த 70 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் தங்களால் முடிந்த தீர்வை காண முயற்சி செய்துள்ளனர். ஆனால், நீதியின் வழியில் தடைகளை ஏற்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்திருந்தால், நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
தேசத்தின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், நான் காங்கிரசை கேட்டுக்கொள்வதெல்லாம், தயவு செய்து, உங்களது வழக்கறிஞர்களை வைத்து, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற தலையீடுகளை மேற்கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். நீதிமன்றம் விரைவாக தீர்ப்பு வழங்க காங்கிரஸ் வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் தாமதமாவதற்கு சங் பரிவார் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையிலும், அயோத்தி விஷயத்தில், அவசர சட்டம் வராது என மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications