நீட், சிபிஎஸ்இ குளறுபடிகள்! நாங்கள் நடத்துவது அமைதி போராட்டம்தான்! கரப்பான் பூச்சி கட்சி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட், சிபிஎஸ்இ குளறுபடிகள் மாணவர்களை கடுமையாக பாதித்திருப்பதாகவும், எனவே இதற்கு எதிராக நாங்கள் அமைதியான போராட்டத்தைதான் முன்னெடுக்க போகிறோம் என்று கரப்பான் பூச்சி கட்சி எனும் அமைப்பின் தலைவர் அபிஜீத் திப்கே விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளால் நாடு முழுவதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில், இந்த குளறுபடிகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி எனும் அமைப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

Cockroach Janta Party

இது குறித்து அபிஜீத் திப்கே பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. 30 வயதான அபிஜீத் திப்கே, ஜூன் 6-ஆம் தேதி காலையில் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அவர் இந்தியா வந்திறங்கிய உடனே விமான நிலையத்திலேயே மத்திய அரசால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துப் பேசியுள்ள அபிஜீத், "விமான நிலையத்திலேயே நான் கைது செய்யப்படலாம் என எனது குடும்பத்தினர் பயப்படுகிறார்கள். நானும் அதற்கு மனதளவில் தயாராகவே உள்ளேன். ஆனால், நம் நாடு இன்னமும் ஒரு ஜனநாயக நாடு என்பதால், அமைதிப் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

அதேபோல கட்சியின் போராட்டம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டுக் குளறுபடி ஆகிய விவகாரங்களை முன்வைத்து இப்போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. "நீட் வினாத்தாள் கசிவால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்காகவும், சிபிஎஸ்இ குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பிற்காகவும் நாம் குரல் எழுப்ப வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதன்மைக் கோரிக்கையாக, தேர்வுத் துறையின் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜூன் 6-ஆம் தேதி டெல்லி விமான நிலையம் வந்தடையும் அபிஜீத், அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்திற்குச் சென்று, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்த அனுமதி கோரத் திட்டமிட்டுள்ளார்.

கல்வித்துறை சீர்கேட்டிற்கு எதிராக இணையதளத்தில் தாங்கள் நடத்திய மனுவில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளதால், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+