முஸ்லீம் மக்கள் தான் அதிகம்.. ஆனாலும் வென்ற பாஜக.. காரணம் ஓவைசி தான்! டேட்டாவை பாருங்க புரியும்
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக மிகப் பெரியளவில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிடாமல் போனதே தோல்விக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல ஓவைசி கட்சியும் சில தொகுதிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த நிலையில், இப்போது நடந்த தேர்தலில் பாஜக வென்றுள்ளது. இதன் மூலம் 1998ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

என்ன காரணம்:
கெஜ்ரிவால் இந்த முறை படுதோல்வி அடைய என்ன காரணம் என்பது குறித்து பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். குறிப்பாக இந்த டெல்லி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து போட்டியிடவில்லை. மாறாக ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாகப் போட்டியிட்டது. இதுவே தோல்விக்குப் பிரதான காரணம் எனப் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அதையும் தாண்டி வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அதான் ஓவைசி.
ஓவைசி:
அசாதுதீன் ஒவைசி தலைமையிலான மஜ்லீஸ் கட்சி டெல்லியில் போட்டியிட்டது. ஓவைசி கட்சி வேட்பாளர்கள் அங்கு இரு தொகுதிகளில் போட்டியிட்டனர். அவர்கள் வெல்லவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். இரு தொகுதிகளிலும் வெற்றியாளரைத் தீர்மானித்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
மஜ்லீஸ் கட்சி வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட்டனர். ஓக்லாவிலிருந்து ஷிஃபா உர் ரஹ்மான் கான் மற்றும் முஸ்தபாபாத்தில் இருந்து தாஹிர் ஹுசைன் ஆகியோர் போட்டியிட்டனர். இருவருமே 2020 டெல்லி கலவரத்துடன் தொடர்புடைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். இருப்பினும், அவர்கள் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஓக்லா தொகுதி:
ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான அமனதுல்லா கான் 23,639 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் மணீஷ் சவுத்ரி இரண்டாவது இடத்தையும், மஜ்லீஸ் கட்சியின் ஷிஃபா உர் ரஹ்மான் கான் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். காங்கிரஸ் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வென்ற போதிலும், வாக்கு வித்தியாசம் பெரியளவில் குறைய மஜ்லீஸ் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளே முக்கிய காரணமாக இருந்தது.

முஸ்தபாபாத்
அடுத்து முஸ்தபாபாத் தொகுதி. இஸ்லாமியர்கள் சுமார் 40% வசிக்கும் இந்த பகுதியில் பாஜக வென்றது பலரும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது. இந்த தொகுதியில் பாஜகவின் மோகன் சிங் பிஷ்த் 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் அடீல் அகமது கான் 67,637 வாக்குகளும், மஜ்லீஸ் கட்சியின் தாஹிர் உசேன் 33,474 வாக்குகளும், காங்கிரஸின் அலி மெஹ்தி 11,763 வாக்குகளும் பெற்றனர். இங்கு எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்ததே பாஜக வெல்லக் காரணமாக இருந்தது.
டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பாஜக 48ல் வென்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியால் 22 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் உட்பட இதர கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications