பொருளாதார சரிவிலிருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே.. திகார் சிறையிலிருந்து "ப.சி." கேள்வி!
Recommended Video
டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் சார்பில் அவரது கணக்கில் இருந்து அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்து கடந்த 5-ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கேள்விகள்
அப்போது அவர் எனக்கு பொருளாதாரத்தை பற்றி கவலையாக இருக்கிறது என்றார். இந்த நிலையில் தனக்கு பதிலாக தனது குடும்பத்தினர் தனது டுவிட்டர் கணக்கிலிருந்து கேள்விகளை கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.

கைது
அதன்படி கடந்த 9-ஆம் தேதி அவரது டுவிட்டர் சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளனர். அதில் அவர் கூறுகையில் ஐஎன்எக்ஸ், ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் உங்களுக்கு பரிந்துரைத்த அதிகாரிகள் யாருமே ஏன் கைது செய்யப்படவில்லை. நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்கின்றனர்.
|
பதிவு
கடைசியாக கையெழுத்திட்ட ஒரே காரணத்தால் நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என பதிவிடப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினமும் ப.சிதம்பரம் சார்பில் அவரது டுவிட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு வெளியாகியுள்ளது.
|
முதலீடு
அதில் உங்களின் ஆதரவுக்கு எனது நன்றி. இந்திய பொருளாதார சரிவால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைவான வேலைவாய்ப்பு, குறைவான ஊதியம், குறைந்த முதலீடு, வர்த்தகம் குறைவால் ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே? என கேட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications