ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு.. அக்.3 வரை நீட்டித்து உத்தரவு
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சித்மபரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்ட அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்ற பின்னர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
எனினும் தனது 74-ஆவது பிறந்தநாளின்போதும் அவர் சிறையிலேயே இருந்தது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் கடுமையாக பாதித்தது. இந்த நிலையில் அவரது 14 நாட்கள் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மதியம் 2.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் அவரது நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ப. சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் சிறை செல்ல நேரிட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications