இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா? டென்ஷன் ஆன ப.சிதம்பரம்.. ‘பாரத்’ இன்னும் அந்த நிலைக்கு போகலயே!
டெல்லி: டெல்லியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
டெல்லியில் இன்றும் நாளையும் உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

ஜி20 மாநாட்டையொட்டி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்தில் பங்கேற்க அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு விருந்திற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேபினட் அந்தஸ்து உள்ள நிலையில், ஜனாதிபதி விருந்தில் அவருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேபினட் அந்தஸ்து கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, தலைவர்களுக்கான ஜனாதிபதி வழங்கும் விருந்து நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவை விருந்துக்கு அழைக்காதது, நாட்டின் பெரும்பான்மை மக்களை மதிக்காததற்கு சமம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று அளிக்கும் விருந்துக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலகத் தலைவர்களுக்கான அரசு விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை அரசாங்கம் அழைக்காததை எந்த ஜனநாயக நாட்டிலும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியா, அதாவது 'பாரதம்', ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை இன்னும் எட்டவில்லை என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications