இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா? டென்ஷன் ஆன ப.சிதம்பரம்.. ‘பாரத்’ இன்னும் அந்த நிலைக்கு போகலயே!
டெல்லி: டெல்லியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
டெல்லியில் இன்றும் நாளையும் உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

ஜி20 மாநாட்டையொட்டி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்தில் பங்கேற்க அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு விருந்திற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேபினட் அந்தஸ்து உள்ள நிலையில், ஜனாதிபதி விருந்தில் அவருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேபினட் அந்தஸ்து கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, தலைவர்களுக்கான ஜனாதிபதி வழங்கும் விருந்து நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவை விருந்துக்கு அழைக்காதது, நாட்டின் பெரும்பான்மை மக்களை மதிக்காததற்கு சமம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று அளிக்கும் விருந்துக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலகத் தலைவர்களுக்கான அரசு விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை அரசாங்கம் அழைக்காததை எந்த ஜனநாயக நாட்டிலும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியா, அதாவது 'பாரதம்', ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை இன்னும் எட்டவில்லை என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications