காஷ்மீர் அட்டாக்.. எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பல்டி அடித்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா அசிஃப் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.

பேட்டியில் அவர் பேசியதாவது, "பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விஷயம் எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் குணமடையை விரும்புகிறோம். இந்தியாவில் நாகாலாந்து முதல் காஷ்மீர் வரையும், சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் தெற்கு பகுதிகளிலும் மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் பார்த்தால் இது உள்ளூர் கிளர்ச்சியாக இருக்கலாம்.
கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என சிறுபான்மையினரை இந்துத்துவா சக்திகள் அடக்க முயற்சிக்கின்றன. எனவேதான் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எந்த சூழலிலும் எங்கும் நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
பெஹல்காம் பகுதியில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள ஏரி மிகவும் பேமஸானது. அதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். அப்படித்தான் நூற்றுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் பைசாரன் பள்ளத்தாக்கிற்கு வந்திருக்கின்றனர். பெஹல்காம் பகுதியிலிருந்து இது சுமார் 6 கி.மீ தொலைவில் இருக்கிறது. பள்ளத்தாக்கு பகுதிக்கு வர கார், ஜீப் வசதிகள் கிடையாது. நடந்து அல்லது குதிரைகள் மூலமாகத்தான் வர வேண்டும்.
இப்படியான பகுதியில் திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 28 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தாக்குதல் நடந்த இடம் புள்வெளி பகுதி என்பதால் பொதுமக்களால் ஓடி ஒளியமுடியவில்லை. தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும். இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் உதவுகிறது என்று பேச்சு அடிபட்டது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications