போலி டிரோன்களை வைத்து பாகிஸ்தான் கவனத்தை சிதறடித்துவிட்டு பிரம்மோஸை ஏவிய இந்தியா! மாஸ் போர் தந்திரம்
டெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவிய பதற்றம் தணிந்திருக்கிறது. ஆனால், மோதல் சமயத்தில் இந்திய விமானப்படை கையாண்ட ஒரு தந்திரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், இந்திய விமானப்படை பாகிஸ்தானை எப்படி ஏமாற்றியது என்பதைப் பார்ப்போம்.
சுகோய்-30 மற்றும் மிக்-29 போன்ற அதிநவீன போர் விமானங்களின் தோற்றத்தில் ஆளில்லா போர் விமானங்களை (UAVs) இந்திய விமானப்படை பயன்படுத்தியதுதான் இந்தத் தந்திரத்தின் முதல் படி. பொதுவாக, நமது ராணுவம் ஏவுகணை சோதனைகளின்போது இலக்குகளைக் காட்டத்தான் இதுபோன்ற போலி விமானங்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை பாகிஸ்தான் விமானப்படைக்கும் அவர்களின் வான் பாதுகாப்பு அமைப்புக்கும் ஒரு பெரிய "டிமிக்கி" கொடுத்திருக்கிறது இந்திய விமானப்படை. இதன் விளைவாக, பாகிஸ்தானின் முக்கியமான 11 விமான தளங்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்த இந்தியாவுக்குச் சரியான வாய்ப்பு கிடைத்தது.

ஆபரேஷன் சிந்தூர் பின்னணி
மே 6 முதல் 10 வரை நடைபெற்ற இந்த ஆபரேஷனில், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மட்டுமல்லாமல், நூர் கான், சர்கோதா, மற்றும் போலாரி போன்ற முக்கியமான ராணுவ விமான தளங்களும் குறிவைக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்கு 15 பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை இந்த ஏவுகணைகள் நிலைகுலையச் செய்தன என்றால் மிகையாகாது. ஆனால், இந்தத் தாக்குதல்களின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், இந்திய விமானப்படை கையாண்ட அந்தப் போலி டிரோன் தந்திரம்தான்.
போலி டிரோன்களின் மாயாஜாலம்
இந்திய விமானப்படை இந்த ஆளில்லா விமானங்களை வடிவமைத்த விதமே ஒரு சுவாரஸ்யமான உத்தி. இவை ரேடார் மற்றும் அகச்சிவப்பு அலைகளில் பார்க்கும்போது அப்படியே சுகோய்-30MKI அல்லது மிக்-29 போர் விமானங்கள் போலவே காட்சியளித்தன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பொறுத்தவரை, இவை உண்மையான அச்சுறுத்தல்களாகவே தோன்றின. இந்தத் தந்திரம் எப்படி வேலை செய்தது என்று பார்ப்போம்:
- முதலாவதாக, இந்த போலி டிரோன்கள் பாகிஸ்தானின் சீன தயாரிப்பான HQ-9 ஏவுகணை அமைப்பைத் தூண்டிவிட்டன. பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் தவறான இலக்குகளை நோக்கி விரட்டப்பட்டன. இதன் மூலம், பாகிஸ்தானின் ரேடார் நிலையங்கள் மற்றும் கட்டளை மையங்களின் இருப்பிடம் இந்தியாவுக்குத் தெரியவந்தது.
- இரண்டாவதாக, பாகிஸ்தான் தனது ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்புகளை இயக்கியவுடன், இஸ்ரேல் தயாரிப்பான ஹாரோப் டிரோன்களை ("தற்கொலை டிரோன்கள்" என்று செல்லமாக அழைக்கப்படுபவை) இந்திய விமானப்படை பயன்படுத்தியது. இந்த டிரோன்கள் ரேடார் அலைகளைத் துரத்திச் சென்று அவற்றை அழித்தன.
- மூன்றாவதாக, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பலவீனமடைந்ததும், இந்திய விமானப்படை தனது பலம் வாய்ந்த, பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் போலாரி மற்றும் நூர் கான் போன்ற முக்கியமான தளங்கள் உட்பட 11 விமான தளங்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
எந்த மாதிரியான டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன?
இந்திய விமானப்படை பயன்படுத்திய டிரோன்களின் சரியான விவரங்களை வெளியிடவில்லை. ஆனால், பாதுகாப்பு நிபுணர்கள் "பன்ஷி ஜெட் 40+" டிரோன்களை இந்தியா பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்த டிரோன்கள் குறிப்பாக வான் பாதுகாப்பு பயிற்சி மற்றும் போர் தந்திரோபாயங்களுக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றின் சில முக்கிய அம்சங்கள்:
- HEAT-அப்யாஸ்: இது பல்வேறு ஏவுகணை அமைப்புகளின் திறனை மதிப்பிடுவதற்கான ஒரு வான் இலக்காகப் பயன்படுகிறது. இதன் அனைத்துப் பயணங்களும் தானியங்கி முறையில் அமைந்தவை. இது ஒரு வினாடிக்கு 180 மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது மற்றும் அதிகபட்சமாக 5 கிலோமீட்டர் உயரத்தை அடைய முடியும்.
- லக்ஷ்யா டிரோன்: இது நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்ட அதிவேக டிரோன். வான் பாதுகாப்புப் பயிற்சிகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. இது ரேடார் மற்றும் அகச்சிவப்பு சமிக்ஞைகளை அதிகரித்து, சுகோய்-30 அல்லது மிக்-29 போன்ற விமானங்களைப்போல் தோற்றமளிக்கக்கூடியது. எதிரிகளின் ரேடார் மற்றும் தகவல் தொடர்புகளை முடக்கும் மின்னணு எதிர் நடவடிக்கைகளும் (ECM) இதில் உள்ளன.
- பன்ஷி ஜெட் 40+: இது பிரிட்டனில் வடிவமைக்கப்பட்ட டிரோன். இந்திய ராணுவம் இதை பயன்படுத்துகிறது. அதிவேக வான் அச்சுறுத்தல்களைப் பிரதிபலிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது ரேடார் மற்றும் அகச்சிவப்பு சமிக்ஞைகளை அதிகரித்து போர் விமானம் அல்லது கப்பல் ஏவுகணை போல் தோற்றமளிக்கும். இதன் சிறிய அளவு எதிரிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதது.
தந்திரம் கைகொடுத்த விதம்
இந்திய விமானப்படை "லக்ஷ்யா" மற்றும் "பன்ஷி" டிரோன்களை வெவ்வேறு ரேடார் மற்றும் அகச்சிவப்பு சமிக்ஞைகளுடன் அனுப்பியது. இதனால் ஒரு பெரிய வான்வழித் தாக்குதல் நடப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் தனது முழு வான் பாதுகாப்பு அமைப்பையும் உடனடியாகச் செயல்படுத்தியது. போர் விமானங்கள் தவறான இலக்குகளை நோக்கி விரட்டப்பட்டன. இந்தச் சமயத்தில், இந்திய விமானப்படை தனது உண்மையான தாக்குதலைத் தொடுத்து, பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் 11 விமான தளங்களையும் துவம்சம் செய்தது.
முதலில், பாகிஸ்தான் இந்திய விமானப்படையின் ஐந்து விமானங்களைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக தகவலைப் பரப்பியது. ஆனால், அவை அனைத்தும் போலி டிரோன்கள் என்பது பின்னர் அம்பலமானது. சமூக ஊடகங்களில் பலரும் இந்தத் தந்திரத்தைப் பாராட்டி வருகின்றனர். லக்ஷ்யா மற்றும் பன்ஷி டிரோன்கள், பாகிஸ்தான் விமானப்படையை முழுமையாக ஏமாற்றிவிட்டதாகவும், அவர்கள் உண்மையான ஜெட்களை அழித்துவிட்டதாக நம்பிவிட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெற்றியின் விளைவுகள்:
- பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பலவீனமடைந்தது: போலி டிரோன்கள் பாகிஸ்தானின் ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்புகளை அம்பலப்படுத்தின. பின்னர் ஹாரோப் டிரோன்கள் அவற்றை அழித்தன.
- 11 விமான தளங்கள் அழிவு: பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் நூர் கான், போலாரி மற்றும் ரஃபிகி போன்ற முக்கியமான விமான தளங்களை அழித்தன. இதில் ஒரு AWACS விமானமும் சேதமடைந்தது.
- மனோவியல் ரீதியான வெற்றி: தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பாகிஸ்தானின் மன உறுதியையும், போர் தந்திரோபாயத்தையும் இந்தியா குறைத்தது. அவர்களை நாலா புறமும் சிதறி ஓட வைத்தது. இதைத்தான் அமெரிக்காவின் பெண்டகன் முன்னாள் அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் ஒரு நாயை போல அங்கும் இங்கும் பதறி ஓடியது என்று குறிப்பிட்டார்.
ஆக, இந்திய விமானப்படை கையாண்ட இந்த சமயோசிதமான தந்திரம் பாகிஸ்தானை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளின் பாதுகாப்பு வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த தகவல்களை இந்தியா டுடே குழுமம் உறுதி செய்துள்ளது.
-
ஈரான் கோரதாண்டவம்.. கடலில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்.. 14 இந்தியர்களின் கதி என்ன? உச்சமடைந்த போர் -
ஈரான் காலி.. தத்தளிக்கும் சவுதி! கச்சா எண்ணெய்க்காக மீண்டும் ரஷ்யாவை நோக்கித் திரும்பும் இந்தியா? -
வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி! இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல் -
கம்பீரை காப்பாற்றிய சஞ்சு.. "அந்த" 9 ஓவர் சேட்டன் ஆட்டத்தை கவனிச்சீகளா.. இங்க விஷயமே இதுதான்! -
"பிடிச்சு வெளுத்து விடுங்க யுவராஜ் பாய்.." அபிஷேக் சர்மாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்- மீம்ஸ்! -
T20 உலக கோப்பை: இந்தியாவுக்கு அடுத்த போட்டி எப்போது? யாருடன் அரையிறுதி விளைாயடப்போகிறது? விவரம் -
"அப்பா- அம்மா 60வது கல்யாணத்துக்கு போகலை! ஆனா கீர்த்தி கல்யாணத்திற்கு தனி விமானத்தில் போன விஜய்!" -
சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து -
1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன? -
புர்ஜ் கலீஃபாவை தாக்கிய ஈரான்.. உலகின் மிக உயரமான கட்டிடத்தில் கிளம்பிய புகை! மக்கள் வெளியேற்றம் -
டேஞ்சர்.. சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? -
கமேனி உயிரிழந்துவிட்டார்.. உறுதி செய்த ஈரான்.. அடுத்து கண்ட்ரோலை எடுக்க போவது யார்? முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications