தீவிரவாதத்தை ஒடுக்குங்க.. இல்லைனா தாக்குதல்தான்.. பாக்.கிற்கு முதல் நாளே வார்னிங் தந்த புது தளபதி
பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையெனில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகலாம் என்று இந்திய ராணுவத்தின் புதிய தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.
டெல்லி: பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையெனில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகலாம் என்று இந்திய ராணுவத்தின் புதிய தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ராணுவ படையின் (தரைப்படை) தளபதி பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். இவர் இனி மூன்று படைகளுக்கும் தளபதியாக செயல்படுவார்.
இந்தியாவில் மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய தரைப்படை ராணுவத்தின் புதிய தளபதியாக் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

என்ன பேட்டி
இதையடுத்து புதிய ராணுவ தளபதி முகுந்த் நரவனே தன்னுடைய பொறுப்புகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், முப்படைகளுக்கு தலைமை தளபதியை நியமித்தது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறனை மேம்படுத்தும். இது சரியான நடவடிக்கைதான். இந்திய ராணுவத்தின் சிறப்பான செயல்பாட்டை நான் தொடர்ந்து செயல்படுத்துவேன்.

நல்லது
எல்லை ஊடுருவலை கண்டிப்பாக கட்டுப்படுத்துவேன். எல்லை பாதுகாப்பை கண்டிப்பாக உறுதிப்படுத்துவேன். அண்டை நாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை எனில் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்திய ராணுவம் இனி முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்.

பாகிஸ்தான்
பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அதற்கு காரணமாக இருக்கும் இடங்களில் முன் கூட்டியே தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. முன்கூட்டியே சில இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பயங்கரவாதம்
சீன எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு போதுமான அளவில் படை வீரர்கள் குவிக்கப்படுவார்கள். அங்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் சமாளிக்க படைகள் தயார் நிலையில் இருக்கும் என்றும் ஜெனரல் நரவானே தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications