பாகிஸ்தான் நம்மை பிரிக்க பார்க்கிறது.. நம் வளர்ச்சியை தடுக்கிறது.. பாஜகவினரிடையே மோடி குமுறல்!
பாகிஸ்தான் பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
டெல்லி: பாகிஸ்தான் பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீர் மாநில பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். தேர்தல் குறித்து ஆலோசனை செய்த அவர் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பேசினார்.
[Read more: இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்யுங்கள்.. இம்ரான் அரசுக்கு பூட்டோ குடும்பம் கோரிக்கை]

பொய்
அவர் தனது பேச்சில், இந்திய மக்கள் பாகிஸ்தான் பரப்பும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டிய நேரம் இது. இந்தியாவை பிரிக்க பாகிஸ்தான் முயல்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தை நிறுத்தவே பாக். முயல்கிறது.

வேண்டும்
மத்திய அரசை மக்கள் நம்ப வேண்டும். யாராலும் செய்ய முடியாது என்று நினைத்த காரியத்தை நாம் நிகழ்த்தி உள்ளோம். புதிய இந்தியாவை உருவாக்க நாம் பாடுபட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் பாடுகிறோம்.

தாக்குதல்
தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தி நம்மை முடக்க பார்க்கிறார்கள். நாம் பாறை போல உறுதியாக நின்று அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அடிபணிய கூடாது. எனக்கு ராணுவத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

முழக்கம்
ஒன்றாக வாழ்வோம்; ஒன்றாக வளர்வோம்; ஒன்றாக போரிடுவோம்; ஒன்றாக வெற்றிபெறுவோம். நாம் மிக கடுமையாக உழைத்து வருகிறோம் . நமது ராணுவ வீரர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ராணுவ வீரர்களால்தான் நம் நாடு வேகமாக பாதுகாப்புடன் முன்னேறுகிறது, என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications