அத்துமீறும் போலீசார்கள்.. புகார்களை விசாரிக்க தனிக்குழு: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
காவல்துறையின் வரம்புமீறல்களை விசாரிக்க தனிக்குழு நியமனம்
டெல்லி: காவல்துறையின் வரம்புமீறல்களை விசாரிக்க தனிக்குழுவை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தனிக்குழுவை விசாரிக்க வலியுறுத்தி உள்ளார்.
சில தினங்களுக்கு உபியில் நடந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது.. கோரக்பூரில் ஒரு ஹோட்டலில் போலீஸார் ரெய்டுக்கு சென்றிருந்தபோது, ஒரு தொழிலதிபர் இறந்துவிட்டார்.. இதன்காரணமாக அம்மாநில கூடுதல் டிஜிபி குர்ஜிந்தர் பால் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்தும் தன்னை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு தரக்கோரியும் குர்ஜிந்தர் பால் சிங் சுப்ரீம்கோர்ட்டில் மனு அளித்திருந்தார்..

எனினும், கூடுதல் டிஜிபி மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில், அவர் தாக்கல் செய்த மனு சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி ரமணா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.. அப்போது, தேசத்துரோக வழக்கிலிருந்து மட்டும் கூடுதல் டிஜிபியை கைது செய்ய தலைமை நீதிபதி விலக்கு தந்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து ரமணா தெரிவிக்கும்போது, தமிழ்நாட்டிலும், கோரக்பூரிலும் போலீசார் சாமான்ய மக்களிடம் தங்கள் பலத்தை காட்டிய அப்பாவி மக்கள் உயிரிழக்க நேர்ந்த சம்பவங்களை எடுத்து காட்டினார்.. பிறகு அவர் சொல்லும்போது, "நாட்டில் சாமான்ய மக்கள் அளிக்கும் புகார்கள் அளவுக்கு அதிகமாக வருகின்றன.. இதில் போலீஸ் அதிகாரிகள் எல்லை மீறி கொடுமைகளை செய்வது வேதனை தருகிறது..
அதனால், போலீஸார் செய்யும் கொடுமைகள் குறித்து, மக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.. ஏற்கனவே இந்த குழு அமைக்க நான் ஆதரவாக இருந்திருக்கிறேன்.
வழக்கு ஒன்றில் போலீஸ் அதிகாரி சிக்கிவிட்டால், அந்த வழக்கில் தண்டனை பெறாமல் தப்பிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது வட்டியுடன் திருப்பி செலுத்த நேரிடும்... இதற்கு முன்புகூட, எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது குறி வைக்கப்படும்.. இது ஏற்க முடியாது.. வேதனைக்குரியது..
ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, போலீஸ் அதிகாரிகள் அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள், ஆனால், அதுவே அடுத்த தேர்தலில் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, கடந்த ஆட்சிக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது... இந்த போக்கு முதலில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications