"எங்க குழந்தைகளை பார்தீங்களா!" குஜராத் பால விபத்து.. அழுது புலம்பும் பெற்றோர்கள்! தொடரும் மீட்பு பணி
டெல்லி: குஜராத் மோர்பி பாலம் இடிந்து மிக மோசமான விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் மச்சு நதியின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த மோர்பி தொங்கு பாலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
யாரும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த விபத்தில் பாலத்தின் மீது இருந்த பலரும் அப்படியே ஆற்றில் விழுந்தனர். நாட்டில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

விபத்து
1879இல் கட்டப்பட்ட இந்த பாலம், இந்தாண்டு தொடக்கத்தில் தான் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டன. 8 முதல் 12 மாதங்கள் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டும் என்ற நிலையில், அது முன்கூட்டியே குஜராத் புத்தாண்டிற்காக அக். 26இல் திறக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக வெறும் 2 கோடி ரூபாய் செலவில் இந்த புனரமைப்பு பணிகளை அவர்கள் முடித்து இருக்கிறார்கள்.

உயிரிழப்பு
இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த கோர விபத்து நிகழ்த்து உள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 140 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு முழு பொறுப்பு ஏற்பதாகக் குஜராத் அரசு அறிவித்து உள்ளது. இன்னும் கூட விபத்தில் பலர் மாயமாகி உள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்குப் பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளார்.

தொடரும் மீட்புப் பணி
மீட்புப் பணிகள் மூன்றாம் நாளாக இன்றும் தொடர்கிறது. இன்னும் கூட பலர் தங்கள் குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்டுபிடிக்க முடியாமல் அச்சத்துடனும் குழப்பத்துடனும் இருக்கிறார்கள். அப்படி அச்சத்துடன் அங்குச் சுற்றி வருபவர் தான் 30 வயதான பிரதாப் சிங் ஜடேஜா. இவரது கர்ப்பிணி மனைவி, இரண்டு குழந்தைகள், மைத்துனர், சகோதரரின் மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகள் என ஏழு பேர் சமீபத்தில் மெல்டி அம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.

குடும்பமே போச்சு
கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் பழமையான தொங்கு பாலத்திற்குச் செல்ல வேண்டும் எனக் குழந்தைகள் அடம்பிடித்து உள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் மோர்பி பாலத்திற்குச் சென்றுள்ளனர். பாலத்தின் நடுவே இவர்கள் சென்ற போது, அது அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். பிரதாப் சிங் ஜடேஜாவும் அவரது சகோதரரும் ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்.

அதிக கூட்டம்
அதேபோல 52 வயதான தையாப் சும்ரா இரு குழந்தைகள் உட்பட மூன்று நெருங்கிய உறவினர்களை இழந்துள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல இப்படிப் பல பேரின் கதைகள் அங்கு உலா வந்து கொண்டு இருக்கிறது. அதேநேரம் பாலத்திற்கு வழக்கமாகச் செல்பவர்கள் அதில் அதிகப்படியான நபர்கள் இருப்பதைக் கண்டு எச்சரிக்கையுடன் இருந்து உள்ளனர். மேலும், சிலர் டிக்கெட் வாங்கினாலும் பாலத்தில் செல்வதைத் தவிர்த்து உள்ளனர்.

உயிர் பிழைத்தோம்
இது தொடர்பாக விபத்தில் உயிர் பிழைத்த சிலர் கூறுகையில், "நாங்கள் அங்கே சென்ற போது வழக்கத்தை விடப் பாலத்தில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. பாலத்தில் கொஞ்ச தூரம் சென்ற உடனேயே இதை நாங்கள் உணர்ந்தோம். இது பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்ந்து நாங்கள் திரும்பத் தொடங்கினோம். அப்போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அப்போது நாங்கள் சேற்றில் விழுந்ததால் உயிர் பிழைத்தோம். இல்லையென்றால் நாங்களும் ஆற்றில் மூழ்கியிருப்போம்" என்றார்.

பெற்றோர்
41 வயதான நிரவ் வோரா கூறுகையில், "பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்ட போது, மேலே இருந்த மக்களில் பலர் தண்ணீரில் மூழ்கினர். நேற்று மாலை வரையிலும் கூட அனைவரது உடல்களும் மீட்கப்படவில்லை. பெற்றோர்கள் ஆற்றின் கரையில், தங்கள் குழந்தைகளின் ஃபோட்டோக்களை வைத்து குழந்தைகளைப் பதற்றத்துடன் தேடி வந்தனர். அதையெல்லாம் பார்க்கும் போது தாங்க முடியவில்லை" என்றார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications