ஒலிம்பிக் போட்டி: ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர்- பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஏர் பிஸ்டல் எனும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார் மனு பாக்கர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் இன்று வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதலாவது பதக்கம் இது. ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது.

இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்த மனு பாக்கருக்கு நாட்டு மக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் பக்கத்தில், இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் (ParisOlympics2024!) இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு ( @realmanubhaker ) வாழ்த்துகள். வெண்கலம் வென்றதற்குப் பாராட்டுகள். இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை மனுபாக்கர் பெற்றுள்ளார். அபாரமான சாதனை! #Cheer4Bharat". இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார். இதேபோல மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மனு பாக்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications