எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. நாகாலாந்து வன்முறை.. கடும் அமளிக்கு சாட்சியான நாடாளுமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின் ஆறாவது நாளான இன்றும் ராஜ்யசபாவில் 12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர்-பழங்குடியினரிடையே நடைபெற்ர மோதல் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த கோரப்பட்டது.

Parliament roundup: On day 6, Amit Shahs statement on civilian killing in Nagaland

நாகாலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப் பெற வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ஓடிங், மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் மற்றும் தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் குறித்த சந்தேகத்தின் பேரில் ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததால், துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் இறந்தனர். தவறுதலாக சுடப்பட்டது பின்னர் தெரியவந்தது.

இகுறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் கிராம மக்கள் ராணுவ வாகனங்களை சுற்றி வளைத்தனர். 2 ராணுவ வாகனங்களுக்கு தீ வைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார்.

தற்போதைய சூழ்நிலை பதட்டமாக உள்ளது, ஆனால் கட்டுக்குள் உள்ளது. டிசம்பர் 5ம் தேதி, நாகாலாந்து டிஜிபி மற்றும் கமிஷனர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, தீவிரத்தை மனதில் கொண்டு, மாநில குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்திருந்தார்.

லோக்சபாவில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) உறுப்பினர் டோகேஹோ யெப்தோமி கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கொல்லப்பட்டவர்களுக்கு மாநில அரசு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு முதல் மத்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர், இழப்பீடு மத்திய அரசு வழங்க வேண்டும்." என்று யெப்தோமி கூறினார்.

இதனிடையே, சட்டவிரோத கடத்தலுக்கு நிதியுதவி செய்பவர்களைத் தண்டிப்பது தொடர்பான முக்கிய விதியான போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தில் வரைவு பிழையை சரிசெய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று, அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு மாற்றாக, 2021ம் ஆண்டுக்கான போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (திருத்தம்) மசோதாவை நிதியமைச்சர் பகவத் காரத் அறிமுகப்படுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+