டெல்லி: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு லோக்சபாவில் நடைபெறுகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். தற்போது மத்திய அரசிடம் இந்த பலம் இல்லை என்பதால், மசோதா நிறைவேற்றம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில், லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி பேசியிருப்பது கனவம் பெற்றிருக்கிறது.
முன்னதாக நேற்றிரவு மத்திய அரசு, மகளிர் இடஒதுக்கீடு சட்டம் ஏப்.16 முதல் அமலுக்கு வருவதாக அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது அமல்படுத்தப்பட வேண்டும் எனில், 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026 நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசிடம் போதுமான பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Apr 17, 2026, 7:45 pm IST
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மட்டுமின்றி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்களும் தோல்வி. இதன்மூலம் மத்திய அரசு கொண்டு வந்த 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
Apr 17, 2026, 7:40 pm IST
லோக்பசாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது. மசோதா மீதான வாக்கெடுப்பில் 489 எம்பிக்கள் பங்கேற்றனர். மசோதாவுக்கு ஆதரவாக 278 பேர் வாக்களித்தனர். எதிராக 211 பேர் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் லோக்சபாவில் மசோதா தோல்வியடைந்தது.
Apr 17, 2026, 7:34 pm IST
மகளிர் இடஒதுக்கீட்டுக்கான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026, மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill 2026) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 ஆகியவற்றின் மீது லோக்சபாவில் ஓட்டெடுப்பு தொடங்குகிறது. 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு இருந்தால் இந்த மசோதா வெற்றி பெறும்.
Apr 17, 2026, 7:16 pm IST
140 கோடி மக்களின் மனதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன் – அமித்ஷா
Apr 17, 2026, 7:06 pm IST
மதஅடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது – அமித்ஷா
அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இல்லை. ஆனால் காங்கிரஸ் சமாதானப்படுத்தும் அரசியலை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் அரசு, இட ஒதுக்கீட்டுக் குழுக்களின் பணிகளை முடக்குவதோவு, அவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது – அமித்ஷா
Apr 17, 2026, 6:57 pm IST
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தங்களின் வாக்குகள் இன்றி தோல்வியடைந்து விடும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால் மசோதாவை தோல்வியடைய விடமாட்டேன் – அமித்ஷா
Apr 17, 2026, 6:55 pm IST
அமித் ஷாவின் 'வடக்கு-தெற்கு பிளவு' குறித்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Apr 17, 2026, 6:55 pm IST
ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதப்பட்டது. தொகுதி மறுவரையறை என்பது தென்மாநிலங்களுக்கு எதிரானது இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தெற்கு VS வடக்கு என்று பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கின்றன – அமித்ஷா
Apr 17, 2026, 6:34 pm IST
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வருகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அது, இது என்று கூறி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வருகின்றன – அமித்ஷா
Apr 17, 2026, 6:33 pm IST
1972ம் முதல் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொகுதி மறுவரையறை முக்கியம் – அமித்ஷா
Apr 17, 2026, 6:29 pm IST
எதிர்க்கட்சிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கவில்லை, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டையே எதிர்க்கின்றன. தொகுதி மறுவரையறையை எதிர்ப்பது என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை அதிகரிப்பதை எதிர்ப்பதாகும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சம பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகவே தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது – அமித்ஷா
Apr 17, 2026, 6:28 pm IST
மகளிர் நலனுக்காகவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன- அமித் ஷா
Apr 17, 2026, 6:27 pm IST
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை 'இந்தியா' கூட்டணியைத் தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை – அமித் ஷா
Apr 17, 2026, 6:25 pm IST
தொகுதி மறுவரைவுக்கு பின் பெண்களுக்கு இடஒதுக்கீடு – அமித்ஷா
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், சரிக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்குவதற்காகவும் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது . தொகுதி மறுவரையறைப் பணிகள் நிறைவடைந்த பின்னரே, நாங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவருவோம் – அமித்ஷா
Apr 17, 2026, 6:24 pm IST
லோக்சபாவில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலுரை வழங்கி வருகிறார்
Apr 17, 2026, 4:49 pm IST
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா மாலை 6 மணிக்கு லோக்சபாவில் உரையாற்றுகிறார்..
Apr 17, 2026, 4:35 pm IST
தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் 4 மணிக்கு வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில், அது தாமதம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள் துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் உரையாற்றவுள்ளார். அதன் பிறகே வாக்கெடுப்பு நடக்கும் என தகவல்!
Apr 17, 2026, 3:32 pm IST
மத்திய அரசின் மசோதாக்களால் தேசம் தாக்கப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம்- ராகுல் காந்தி
Apr 17, 2026, 3:32 pm IST
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்று தெரிந்தும் பீதியில் பாஜக அரசு இதை கொண்டு வந்துள்ளது- ராகுல் காந்தி
Apr 17, 2026, 3:32 pm IST
பாஜகவினர் தங்களை ராணுவம் என்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் என்றும் நினைத்து கொள்கிறார்கள்- ராகுல் காந்தி
Apr 17, 2026, 3:32 pm IST
நீங்கள் சாதாரண ஒரு அரசியல் கட்சி; ராணுவமோ ஒட்டுமொத்த இந்திய மக்களோ இல்லை- ராகுல் காந்தி
Apr 17, 2026, 3:31 pm IST
நாங்கள் இந்திய மக்களை எதிர்க்கவில்லை.. பாஜக என்ற அரசியல் கட்சியை தான் எதிர்க்கிறோம்- ராகுல் காந்தி
Apr 17, 2026, 3:00 pm IST
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரை
Apr 17, 2026, 3:00 pm IST
இந்திய வரைபடத்தையே மாற்ற பாஜக முயல்கிறது- ராகுல் காந்தி
Apr 17, 2026, 3:00 pm IST
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்து சொல்வதால் மத்திய அரசுக்கு ஏன் கசக்கிறது- ராகுல் காந்தி
Apr 17, 2026, 3:00 pm IST
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவே கிடையாது- ராகுல் காந்தி
Apr 17, 2026, 3:00 pm IST
இந்திய பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் வெட்கக்கேடான செயலை பாஜக செய்கிறது- ராகுல் காந்தி
Apr 17, 2026, 12:11 pm IST
மக்களவை சபாநாயகருக்கு நச் பதிலடி கொடுத்த திமுக எம்பி கனிமொழி
ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியிருக்கிறார் என்று நேற்று டி.ஆர்.பாலு பேசியிருந்தார்
கருப்புக்கொடி ஏற்றினால் எனக்கு என்ன? என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டிருந்தார்
கருப்புக்கொடி என்பது போராட்டத்தின் அடையாளம் என கனிமொழி எம்பி விளக்கம்
கனிமொழியின் விளக்கத்தை கேட்டு சபாநாயகர் ஓம் பிர்லா சைலண்ட்
Apr 17, 2026, 12:11 pm IST
மக்களவை சபாநாயகருக்கு நச் பதிலடி கொடுத்த திமுக எம்பி கனிமொழி எம்பி: ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியிருக்கிறார் என்று நேற்று டி.ஆர்.பாலு பேசியிருந்தார். கருப்புக்கொடி ஏற்றினால் எனக்கு என்ன? என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டிருந்தார். இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி, கருப்புக்கொடி என்பது போராட்டத்தின் அடையாளம் விளக்கமளித்துள்ளார். கனிமொழியின் விளக்கத்தை கேட்டு சபாநாயகர் ஓம் பிர்லா சைலண்ட்.
Apr 17, 2026, 11:59 am IST
“பெரியார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது, நீதி என்பது அனைவருக்கும் சமமாக வழங்குவது என்பது அல்ல. நீதி என்பது யாருக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவது என்பதுதான். ஆனால் மத்திய பாஜக அரசின் நீதி என்பது, அவர்களுக்கு எது தேவையோ அதை நிறைவேற்றுவது. அதுதான் நீதி என்று சொல்லி அடுத்தவர்களுக்கும் கொடுப்பது” - லோக்சாபவில் கனிமொழி எம்பி பேச்சு
READ MORE
11:32 AM, 16 Apr
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரைவுக்கான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுவரைவுக்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.
11:32 AM, 16 Apr
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் இன்று தாக்கல் ஆகின்றன
11:33 AM, 16 Apr
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு முன்பாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம்
11:33 AM, 16 Apr
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
11:33 AM, 16 Apr
மத்திய அரசு தாக்கல் செய்த 2 மசோதாக்களுக்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு. காங்கிரஸ் கட்சியின் எம்பி கேசி வேணுகோபால் 2 மசோதாக்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தார்.
Congress MP KC Venugopal opposes the introduction of Constitution (One Hundred and Thirty-First Amendment) Bill, 2026, Union Territories Laws (Amendment) Bill, 2026 and Delimitation Bill, 2026. pic.twitter.com/vTpO7phzQL
விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரப்படும்-அமித் ஷா
11:40 AM, 16 Apr
வெறும் ஆட்சேபனைகளை மட்டுமே எழுப்ப முடியும் -அமித் ஷா
11:40 AM, 16 Apr
தொடக்க நிலையிலேயே இப்படி பேசுவது சரியான போக்கு இல்லை- அமித் ஷா
11:40 AM, 16 Apr
தொகுதி மறுசீரமைப்பு குறித்த காங்கிரஸ் எம்பி வேணுகோபால் பேச்சுக்கு அமித் ஷா எதிர்ப்பு
11:45 AM, 16 Apr
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் லோக்சபா எம்பிக்கள் கருப்பு சட்டசபை அணிந்து சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்பு
11:53 AM, 16 Apr
தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டைமாவட்டம் வன்னிவீடு கிராமத்தில் திமுக ஐடி விங்க் பெண்கள் தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிராக கோலமிட்டும், கருப்பு கொடி ஏந்தியும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
11:53 AM, 16 Apr
தொகுதி மறுவரை மசோதா, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து லோக்சபாவில் இன்று மாலை 3 மணிக்கு உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி.
11:59 AM, 16 Apr
தொகுதி மறுவரையறை மசோதாவை திட்டவட்டமாக திமுக எதிர்க்கிறது. எந்தவித சமரசமின்றியும் திமுக எதிர்க்கிறது. 223ல் நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மட்டுமே திமுக ஆதரவு அளிக்கிறது – திமுக எம்பி டிஆர் பாலு லோக்சபாவில் பேச்சு.
12:03 PM, 16 Apr
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
12:03 PM, 16 Apr
தமிழகத்திற்கு பாதிப்பு வராது என மத்திய அரசு உறுதியளித்துவிட்டது- எடப்பாடி
12:03 PM, 16 Apr
தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது- எடப்பாடி பழனிசாமி
12:17 PM, 16 Apr
தொகுதி மறுவரையறை மசோதா பற்றி விவாதிக்க லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து லோக்சபாவில் வாக்கெடுப்பு நடந்தது. அப்போது மசோதா மீதான விவாதத்துக்கு ஆதரவாக 207 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் மசோதா லோக்சபாவில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
12:18 PM, 16 Apr
543 உறுப்பினர்களில் 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
12:18 PM, 16 Apr
அரசமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற 3ல் 2 பங்கு ஆதரவு தேவை
12:18 PM, 16 Apr
பகுதிவாரி வாக்கெடுப்பில் 207 பேர் ஆதரவு : 126 பேர் எதிர்ப்பு
12:18 PM, 16 Apr
தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய பகுதிவாரி வாக்கெடுப்பு
12:18 PM, 16 Apr
லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜ்யசபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு.
12:52 PM, 16 Apr
மகளிர் இடஒதுக்கீடு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் மீது 12 மணிநேரம் விவாதிக்கப்படும். எதிர்க்கட்சியினர் ஒப்புக்கொண்டால் 18 மணிநேரமாக விவாத நேரத்தை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் – மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ.
1:22 PM, 16 Apr
தொகுதி மறுவரையறை யாருக்கும் பாதிப்பில்லை – மத்திய சட்ட அமைச்சர்
2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைப் பணிகள் நிறைவடைந்த பிறகு நடைமுறைப்படுத்தப்படும். மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 815 இடங்களாக உயர்த்தப்படும். மொத்த இடங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கான 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் எந்தவொரு மாநிலமும் தனது பிரதிநிதித்துவத்தை இழக்காது - மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்.
1:58 PM, 16 Apr
மகளிர் இடஒதுக்கீட்டை முன்னெடுப்பதற்காக தொகுதி மறுவரையறையை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை கட்டாயமாக மத்திய அரசு திணிக்கிறது – காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய்.
3:50 PM, 16 Apr
மகளிருக்கான இடஒதுக்கீடு, தொகுதி மறுவரை தொடர்பான மசோதா மீதான விவாதத்தில் பிரதமர் மோடி லோக்சபாவில் உரையாற்றி வருகிறார்.
3:50 PM, 16 Apr
மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்தியாவின் நாடாளுமன்றத்தின் வரலாற்றில் முக்கிய தருணமாக அடையாளப்படுத்தப்படும். இந்தச் சட்டம் உண்மையில் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதன்பிறகு காலப்போக்கில் அது மேலும் வலுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் – பிரதமர் மோடி.
3:51 PM, 16 Apr
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலமாக நாட்டுக்கான தேசிய கொள்கை உருவாக்கத்தில் பெண்கள் அதிகமாக ஈடுபட முடியும். இது நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெருமையாக கருதுகிறேன் – பிரதமர் மோடி.
3:51 PM, 16 Apr
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வராமல் காலம் தாழ்த்தியவர்களை கடந்த காலங்களிலேயே பெண்கள் தண்டித்து உள்ளனர். இந்த விஷயத்தில் யார் அரசிய் செய்ய விரும்பினாலும் அவர்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் கடந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது? என்பதை யோசித்து கொள்ளுங்கள் – பிரதமர் மோடி
3:51 PM, 16 Apr
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சாதகமானது இல்ல. இது ஆளுங்கட்சிக்கு மட்டுமோ அல்லது தனக்கு தனிப்பட்ட முறையிலோ சாதகமானஇ இல்லை. இந்த மசோதா திறம்பட செயல்படுத்தப்பட்டால் அதன் வெற்றி நம் நாட்டின் அனைத்து மக்களுக்குமானதாக இருக்கும். இறுதியில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கே ஒரு பெருமையாக அமையும். இந்த சீர்திருத்தத்தை, ஒரு குறிப்பிட்ட கட்சியின் சாதனையாகக் கருதுவதை விட, ஒரு நாட்டின் தேசிய அளவிலான முன்னேற்றமாகவே பார்க்க வேண்டும்
Special Parliament session Today LIVE News in Tamil (நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடர்): நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. குறிப்பாக, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் இந்தத் தொடரின் மையப்புள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.