நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..ஜூலை 21 ல் தொடங்குகிறது.. மொத்தம் எத்தனை நாள்?
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தை எடுத்து கொண்டால் ஆண்டில் தொடக்கத்தில் ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும். அதன்பிறகு மழைக்கால கூட்டத்தொடரும், ஆண்டின் இறுதியில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும்.

ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது. கடந்த ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அமர்வுகளாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து. ஏப்ரல் 4ம் தேதி இந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் தான் இப்போது மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும், நமக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் நம் படை வீரர்கள் பாகிஸ்தானை பந்தாடினர். பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளம், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதற்கிடையே தான் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய அரசு விவாதிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications