Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடு வானில் பரபரப்பு... திடீரென்று எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபர்.. பயணிகள் செம ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடு வானத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் நெருக்கடி நிலையில் வெளியேறும் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வழக்கம்போல ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டுள்ளது.

Passenger onboard SpiceJet flight tries to open emergency exit mid-air

அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென்று ஒருவர், எமர்ஜென்சி கதவைத் திறக்க முயன்றுள்ளார். இதைக் கண்டதும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், விமான குழுவும் சக பயணிகளும் இணைந்து அந்த பயணியைப் பிடித்துள்ளனர்.

இது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 27, 2021 அன்று, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானம் பறந்து கொண்டிருந்த போது ஆக்ரோஷமாக விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றார்" என்று தெரிவித்துள்ளது.

Passenger onboard SpiceJet flight tries to open emergency exit mid-air

பின்னர், அந்த விமானம் அவசர அவசரமாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது குறித்தும் இதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+