மாஸ்க், கையுறை என கொரோனா கிட் கொடுத்து பயணிகளை வரவேற்ற டெல்லி போலீஸ்
டெல்லி விமான நிலையத்தில் கொரோனா கிட் கொடுத்து பயணிகளை வரவேற்ற போலீஸ்
டெல்லி: பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா காரணமாக அந்நாட்டுடனான விமான போக்குவரத்திற்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இருப்பினும், மற்ற நாடுகளுடனான விமானப் போக்குவரத்து வழக்கம் போலவே இருக்கிறது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் வெளிநாடுகளிலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பாதுகாப்பு கிட்டையும், பூங்கொத்துகளையும் கொடுத்து டெல்லி போலீசார் வரவேற்றனர்.

கொரோனா பரவல் காரணமாக விமான நிலையங்களில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை உற்சாகப்படுத்த இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், "வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் பூங்கொத்துடன் மாஸ்க், கையுறைகள், சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய கொரோனா கிட்டை வழங்கி வரவேற்கிறோம். அதில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நினைவூட்டும் பேட்ஜும் உள்ளது.
இந்த முயற்சி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தியது. மேலும், புத்தாண்டு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாரின் மன உறுதியையும் அதிகரிக்கும் வகையில் இது இருந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதன் நன்மைகள் குறித்து விளக்கவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. மேலும், காவலர்கள் இது குறித்து பயணிகளுக்கு விளக்கினர்.
கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கார்களை முன்பதிவு செய்வது போன்றவற்றிலும் காவல் துறையினர் பயணிகளுக்கு உதவினார்கள்" என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications