ரயில்வே ஸ்டேஷன் போன்ற கூட்டம்.. கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் டெல்லி விமான நிலையம்?
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ஓமிக்ரான் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதால் கொரோனா சோதனை மேற்கொள்ள பயணிகள் 8 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இதனால் விமான நிலையங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை கொரோனா இருந்தால் அவர்களுக்கு ஓமிக்ரான் சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

விமான நிலையம்
டெல்லி விமான நிலையம் குறித்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கு ரயில்நிலையம் போல் இருக்கிறது. ஆனால் கொரோனா பரிசோதனைக்காக இத்தனை பெரிய வரிசையில் பயணிகள் காத்திருக்கும் சூழல் உள்ளது. பிசிஆர் டெஸ்ட் எடுக்க ரூ 500 செலுத்த வேண்டும். இதற்கான முடிவுகள் வர 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்.

கொரோனா பரிசோதனை
அது போல் ரேபிட் கொரோனா வைரஸ் சோதனைக்கு ரூ 3500 செலவிட்டால் 2 மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்கும். இதுகுறித்து பயணிகள் கூறுகையில் கொரோனா பரிசோதனைக்காக இத்தனை கும்பலை சேர்ப்பதால் கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக விமான நிலையம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் அதிக பணம் செலவழித்தும் கண்காணிப்பு விதிமுறைகள் எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகின்றன போன்ற கேள்விகளை கேட்கிறார்கள்.

மத்திய அரசு
சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மத்திய அரசு சொல்கிறது, ஆனால் இத்தகைய கூட்டத்தில் எப்படி பின்பற்ற முடியும்? விமான டிக்கெட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முத்திரை இருந்தும் கடந்த 24 மணி நேரமாக யாரும் போன் செய்து மேற்கொண்ட நடைமுறைகளை தெரிவிக்கவில்லை என்றனர்.
Recommended Video

விமான நிலைய அதிகாரிகள்
இதுகுறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில் பயணிகள் ரேபிட் சோதனை அல்லது பிசிஆர் சோதனை மேற்கொள்ள விமான நிலையத்தில் 20 கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் இது போல் பதிவு செய்யும் நேரம் மிச்சமாகி, நேராக பரிசோதனைக்கு செல்லலாம் என்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications