டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் இனி கட்டண வசூல் இல்லை.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் புழக்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்

ரொக்கப் பணத்தின் மூலம் வணிகம் மேற்கொள்வதை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ஆண்டுக்கு ரூ1 கோடிக்கும் மேல் ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் அதற்கு டிடிஎஸ் வரி 2 சதவீதம் விதிக்கப்படும் என அறிவித்தார்
ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை மேலும் சுலபம் ஆக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்றார்
வருமான வரிக் கணக்குகளை இனி டிஜிட்டல் முறையில் பரிசோதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை உள்ளோருக்கு கூடுதலாக 3% வரி விதிக்கப்படும்
ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications