பட்ஜெட் 2019: 3 கோடி சில்லரை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: 3 கோடி சில்லரை வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அள்ளி வீசப்பட்ட சலுகைகள் தற்போது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு அவர் இன்றைய தினம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
அவர் கூறுகையில் 3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
இந்திய பொருளாதாரம் 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி பெறும்: நிர்மலா சீதாராமன்
ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது. இந்த திட்டத்திற்கு பிரதான் மந்த்ரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது என்றார்.