கை தட்டல், சைரன் ஒலி, தட்டில் அடித்து சத்தம்.. மருத்துவ ஊழியர்களுக்காக மாஸ் காட்டிய இந்தியா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று மருத்துவ ஊழியர்கள் சேவையை பாராட்டும் வகையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக கை தட்டினர்.
Recommended Video
கடந்த வியாழக்கிழமை, இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இந்த சுய ஊரடங்கு உத்தரவு அவசியம் என்று வலியுறுத்தினார்.

மேலும், மாலை 5 மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு பால்கனி அல்லது ஜன்னலோரம் அல்லது வாசலிலாவது வந்து நின்று கை தட்ட வேண்டும், அல்லது சைரன் ஒலிக்க வேண்டும், அல்லது விசில் அடிக்க வேண்டும் என்பதுபோல கேட்டுக்கொண்டார்.
#WATCH Uttarakhand: People come out on their terraces and balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid. #CoronavirusPandemic. Visuals from Dehradun pic.twitter.com/5Jn0rYGD9R
— ANI (@ANI) March 22, 2020
அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க, மக்கள் தங்கள் மொட்டை மாடிகளிலும் பால்கனிகளிலும் நின்று கைதட்டியும், பாத்திரங்களை அடித்தும், ஆரவாரம் செய்தனர். டேராடூன் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இது.
#WATCH Delhi: People wave the tricolour outside Jama Masjid to express their gratitude to those providing essential services amid #CoronavirusPandemic. pic.twitter.com/byHlaBgFbR
— ANI (@ANI) March 22, 2020
டெல்லி, ஜும்மா மசூதிக்கு வெளியே மக்கள் தேசிய கொடியை அசைத்து மருத்துவ சேவைகளை வழங்குபவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
#WATCH Punjab: People come out on their balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid #CoronavirusPandemic. Visuals from Amritsar. pic.twitter.com/PUJgDlCBId
— ANI (@ANI) March 22, 2020
மருத்துவ சேவைகளை வழங்குவோருக்கு நன்றி தெரிவிக்க மக்கள் கைதட்டியதோடு, பாத்திரங்களை அடித்தும் ஒலி எழுப்பினர், விதவிதமான மணிகள் மூலமும் ஒலி எழுப்பினர். இது பஞ்சாப் மாநிலம். அமிர்தசரஸ் காட்சிகள்.
#WATCH: People come out on their balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services amid #CoronavirusPandemic, in Mumbai, Maharashtra. pic.twitter.com/dIzBYF5ELq
— ANI (@ANI) March 22, 2020
மும்பை குடியிருப்பு ஒன்றில், மக்கள் தேசியக் கொடியுடன், கைதட்டியும், இந்தியாவை வாழ்த்தியும் கோஷமிட்டனர்
இன்னும், தீயணைப்பு படை வீரர்கள், வாகனங்களின் சைரனை ஒலிக்க விட்டு தங்கள் ஆதரவை கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications