வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவுக்கு எதிராக திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
முஸ்லிம் மன்னர்களாலும், செல்வந்தர்களும் கடவுளுக்கு தானமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கோடிக்கணக்கிலான சொத்துகளே வக்பு சொத்துகளாகும். இந்த சொத்துகள் மூலம் வரும் வருவாயைக் கொண்டு முஸ்லிம் மக்களின் கல்வி, மசூதி பராமரிப்பு ஆகிய நற்பணிகளுக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 1954 ஆம் ஆண்டு வக்பு சொத்துகளை முறைப்படுத்துவதற்காக வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 1995 ஆம் ஆண்டு புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த சட்டமே அமலில் உள்ளது. இந்நிலையில், வக்பு சொத்துகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக மோடி தலைமையிலான அரசு வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து கடந்த ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு அதில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டதையடுத்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வக்பு சட்ட மசோதாவை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு தாக்கல் செய்தார். அதிகம் பேர் ஆதரவளித்ததால் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு சட்ட மசோதா நிறைவேறியது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளனன.
திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்யவுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications