பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.2 உயர்த்திய மத்திய அரசு! வாகன ஓட்டிகளுக்கு எதிர்பார்க்காத அதிர்ச்சி
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ 2 உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச விலையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி வந்தன. இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை 4.5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கும் பிரென்ட் கச்சா எண்ணெய் 4.39 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 62.7 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த விலை குறைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்து விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நம்பினர்.
மத்திய அரசு
ஆனால் தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ 2 உயர்த்தி உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே செலுத்த வேண்டும் என்றும் இதை வாடிக்கையாளர்களின் தலைமேல் சுமத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல்
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூ 13 ஆகவும் டீசலுக்கு ரூ 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரி என்பது இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் சில பொருட்களுக்கு மத்திய அரசு விதிக்கிறது. இது உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியாகும்.
உற்பத்தியாளர்கள்
இந்த வரியை உற்பத்தியாளர்களே செலுத்திவிட்டு, அதை அந்த பொருளின் விலையுடன் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்வார்கள்.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் அது நேரடியாக மக்களுக்குச் செல்வதை தடுத்துவிட்டு அந்த லாபத்தை கலால் வரி என்ற பெயரில் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது என சொல்லப்படுகிறது.
கலால் வரி
ஒரு வேளை கச்சா எண்ணெயின் விலை உயருமானால் இந்த கலால் வரி உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் அவற்றை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டிவிடக் கூடும் என சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை 2024 ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. அதாவது விண்ட் ஃபால் டேக்ஸ் என்பது ஒரு சில குறிப்பிட்ட தொழில்கள், பொருளாதார நிலைமைகளால் இயல்பான வர்த்தக நடைமுறையை தாண்டி அதிக லாபம் ஈட்டும் போது அரசாங்கம் விதிக்கும் வரியாகும்.
2017 ஆம் ஆண்டு
கடைசியாக 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் கலால் வரி 2 ரூபாயும் அதன் பிறகு ரூ.1.50 பைசாவு குறைக்கப்பட்டது. பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் ரூ 2 உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி 2 ரூபாயும் டீசலுக்கு ரூ 5 ம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications