நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.. தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு?
டெல்லி: நாடு முழுவதும் நீண்டகாலமாக குறைக்கப்படாமலேயே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையானது 1 லிட்டருக்கு ரூ2 முதல் ரூ4 வரை குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக மிக குறைவாகிவிட்ட போதிலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மலிவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட போதும் பொதுமக்களுக்காக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. தனியார் எண்ணெய் எரிபொருள் நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் அடைந்து வந்தன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் டீலர்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டியுள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, எண்ணெய் நிறுவனங்களின் முடிவு வரவேற்புக்குரியது. இந்த முடிவால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையக் கூடும். சட்டசபை தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த விலை குறைப்பு பின்னர் அமல்படுத்தப்படும் என்றார்.
இருந்த போதும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் களம், பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் நிலையில் இந்த முடிவு, வாக்காளர்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications