"உடனே வாபஸ் பெறுங்கள்!" நுபுர் சர்மா பற்றி சுப்ரீம் கோர்ட் கருத்துகளுக்கு.. எதிராக புதிய மனு தாக்கல்
டெல்லி: நுபர் சர்மா குறித்து உச்ச நீதிமன்றம் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்து இருந்த நிலையில், இது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபர் சர்மா டிவி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.
இது சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது பாஜக கட்சி ரீதியான நடவடிக்கையை எடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்தது.

நுபுர் ஷர்மா
இந்தச் சூழலில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாகப் பல மாநிலங்களில் நுபர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்படி பல்வேறு மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய நுபுர் ஷர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்து இருந்தது.

உச்ச நீதிமன்றம்
நபிகள் நாயகம் குறித்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் அவதூறு கருத்தால் இந்த நாடே பற்றி எரிகிறது; நுபுர் சர்மாவின் அவதூறு கருத்தால்தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்; நுபுர் சர்மா தமது அவதூறு பேச்சுகளுக்காக டிவியில் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார்

திரும்பப் பெற வேண்டும்
இந்நிலையில், நீதிபதி சூர்யா காந்த்தின் கருத்துகளைத் திரும்பப் பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதியிடம் அஜய் கௌதம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீதிபதி சூர்யா காந்த்தின் கருத்துகளை என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நுபர் சர்மா வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால் இந்த கருத்துகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பாதிக்கும்
நீதிபதியின் கருத்துகள் நியாயமான விசாரணையை பாதிக்கலாம் என்றும், நுபுர் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உதய்பூர் படுகொலை தொடர்பாக நீதிபதிகளின் கருத்துக்கள் கொலையை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இது கொலையாளிகளை விடுவிக்க வழிவகுக்கும் என்பதால் இதை வாபஸ் பெற வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக இந்தியா.காம் இணையதளம் தனது செய்தியில் கூறி உள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் நுபர் சர்மா குறித்து மேலும், "ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் இத்தகைய கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது. சில நேரங்களில் அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார்கள். நுபுர் சர்மா மன்னிப்பு கேட்பது, தமது கருத்துகளை வாபஸ் பெறுவது என்பது எல்லாம் காலம் கடந்த பின்னரானது. நுபுர் சர்மா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நுபுர் சர்மாவை ஏன் போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனர். நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications