பிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு!
டெல்லி: பிஎம் கேர்ஸ் என்பது அரசின் பொது நிதி கிடையாது, இதனால் இதை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கிய போது மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதற்காகவும், கொரோனா கட்டுப்பாடு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பிஎம் கேர்ஸ் உருவாக்கப்பட்டது.
பிரதமரின் அவசர கால நிதி ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பிஎம் கேர் தனியாக உருவாக்கப்பட்டது. பல கோடி பொது மக்கள், நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள், பிரபலங்கள் இதற்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கினார்கள்.

வழக்கு
பிஎம் கேர்ஸ் நிதிக்கு எவ்வளவு அளிக்கப்பட்டது என்பது விவாதப்பொருளாக உள்ள நிலையில் இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி பிஎம் கேர்ஸ் நிதியை அரசியல் சாசனப்பிரிவு 12-ன் படி பொது நிதியாக அறிவிக்க வேண்டும், இதை கையாள்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், இது பிரதமர் உள்ளிட்டோர் இருக்க கூடிய நிதியம் என்பதால் அரசின் பிரிவாக கருதி தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

யார் மனு
மூத்த வழக்கறிஞர் சம்யாக் காங்வால் உள்ளிட்ட சிலர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டி இருந்தது. மாறாக இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் முன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

பிரமாண பத்திரம்
அதில், இந்த பிஎம் கேர் என்பது ஒரு தொண்டு அமைப்பாக உருவாக்கப்பட்டது. இது அரசுக்கு கீழ், அரசியலமைப்பு சட்டத்திற்கு கீழ் உருவாக்கப்படவில்லை. அதோடு மாநிலங்கள் அல்லது மத்திய அரசின் எந்த அவை மூலமும் சட்டமாக இயற்றப்பட்டு இந்த பிஎம் கேர் உருவாக்கப்படவில்லை.
இந்த பிஎம் கேர் என்பதை மத்திய அரசாலோ அல்லது வேறு அரசாலோ கட்டுப்படுத்தப்படும் வகையிலும், சொந்தம் கொண்டாடும் வகையிலோ, நிதி நிர்வாகம் செய்யும் வகையிலோ உருவாக்கப்படவில்லை.

நிதி
இதற்கு மக்கள், நிறுவனங்கள் சுயமாக முன் வந்து நிதி கொடுத்தனர். ஆனால் மத்திய அரசு நிறுவனங்கள் சார்பாக இதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பிஎம் கேர் என்பது மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் கீழ் வரவில்லை. அதேபோல் இது பொது தொண்டு நிறுவனம் என்பதால் சிஏஜியின் ஆய்விற்கு கீழ் வராது. தணிக்கைக்கு கீழ் வர முடியாது.

சிஏஜி
இதனால் பிஎம் கேர் நிதி என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. இது பொது அரசு நிறுவனம் அல்லது அமைப்பு கிடையாது. இந்த தொண்டு அமைப்பை மத்திய அரசுகளோ, மாநில அரசுகளோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிஎம் கேர் நிதி என்பதை மார்ச் 27, 2020 உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications