பிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு!
டெல்லி: பிஎம் கேர்ஸ் என்பது அரசின் பொது நிதி கிடையாது, இதனால் இதை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கிய போது மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதற்காகவும், கொரோனா கட்டுப்பாடு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பிஎம் கேர்ஸ் உருவாக்கப்பட்டது.
பிரதமரின் அவசர கால நிதி ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பிஎம் கேர் தனியாக உருவாக்கப்பட்டது. பல கோடி பொது மக்கள், நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள், பிரபலங்கள் இதற்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கினார்கள்.

வழக்கு
பிஎம் கேர்ஸ் நிதிக்கு எவ்வளவு அளிக்கப்பட்டது என்பது விவாதப்பொருளாக உள்ள நிலையில் இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி பிஎம் கேர்ஸ் நிதியை அரசியல் சாசனப்பிரிவு 12-ன் படி பொது நிதியாக அறிவிக்க வேண்டும், இதை கையாள்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், இது பிரதமர் உள்ளிட்டோர் இருக்க கூடிய நிதியம் என்பதால் அரசின் பிரிவாக கருதி தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

யார் மனு
மூத்த வழக்கறிஞர் சம்யாக் காங்வால் உள்ளிட்ட சிலர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டி இருந்தது. மாறாக இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் முன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

பிரமாண பத்திரம்
அதில், இந்த பிஎம் கேர் என்பது ஒரு தொண்டு அமைப்பாக உருவாக்கப்பட்டது. இது அரசுக்கு கீழ், அரசியலமைப்பு சட்டத்திற்கு கீழ் உருவாக்கப்படவில்லை. அதோடு மாநிலங்கள் அல்லது மத்திய அரசின் எந்த அவை மூலமும் சட்டமாக இயற்றப்பட்டு இந்த பிஎம் கேர் உருவாக்கப்படவில்லை.
இந்த பிஎம் கேர் என்பதை மத்திய அரசாலோ அல்லது வேறு அரசாலோ கட்டுப்படுத்தப்படும் வகையிலும், சொந்தம் கொண்டாடும் வகையிலோ, நிதி நிர்வாகம் செய்யும் வகையிலோ உருவாக்கப்படவில்லை.

நிதி
இதற்கு மக்கள், நிறுவனங்கள் சுயமாக முன் வந்து நிதி கொடுத்தனர். ஆனால் மத்திய அரசு நிறுவனங்கள் சார்பாக இதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பிஎம் கேர் என்பது மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் கீழ் வரவில்லை. அதேபோல் இது பொது தொண்டு நிறுவனம் என்பதால் சிஏஜியின் ஆய்விற்கு கீழ் வராது. தணிக்கைக்கு கீழ் வர முடியாது.

சிஏஜி
இதனால் பிஎம் கேர் நிதி என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. இது பொது அரசு நிறுவனம் அல்லது அமைப்பு கிடையாது. இந்த தொண்டு அமைப்பை மத்திய அரசுகளோ, மாநில அரசுகளோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிஎம் கேர் நிதி என்பதை மார்ச் 27, 2020 உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications