Surgical Strike 2: எதிர்க்கட்சிகள் கண்டனம் எதிரொலி.. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார் மோடி
அனைத்து கட்சிகள் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று கூட்ட இருக்கிறார்.
டெல்லி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இதுவரை மத்திய அரசு கூட்டாதது ஏன் என்று நேற்று 21 கட்சிகள் கூடி கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நமது வீரரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது. அவரை பத்திரமாக மீட்க வேண்டிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. ஆனால் நிலைமை சரியானால்தான் அவரை விடுவிப்போம் என்று பாகிஸ்தான் கூறி விட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை டெல்லியில் கூடிய காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் நிலவரம் குறித்து விவாதித்தனர். பின்னர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அப்போது, அரசு இதுவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன என்று கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்குவதாகவும், அதை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்திருந்தனர். (எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை எடியூரப்பா தனது பேச்சின் மூலம் உடனேயே நிரூபித்து விட்டார்)
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவசர அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அவரது வீட்டில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாகிஸ்தானுடனான மோதல் சூழல் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications