போருக்கு ரெடியான இந்தியா? ரஷ்யா ட்ரிப்பை ரத்து செய்த மோடி.. திடீரென என்ன நடந்தது? பரபரப்பு
சென்னை: மே 9 ஆம் தேதி ரஷ்யாவின் நடக்க உள்ள வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவிற்கு செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் வெற்றி பெற்றதன் 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் அங்கே ஆண்டு விழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும். மே 9 ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் இந்த வெற்றி தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு ரஷ்யா அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்திருந்தது.
ரஷ்ய நாட்டின் ராணுவ மற்றும் வரலாற்று வெற்றியை வெளிப்படுத்தும் வருடாந்திர நிகழ்வான இந்த நினைவு அணிவகுப்பில் பங்கேற்க பல நட்பு நாடுகளின் தலைவர்களையும் ரஷ்யா அழைத்திருந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பல சர்வதேசத் தலைவர்கள் ரஷ்யாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கடைசியாக ஜூலை 2024 இல் ரஷ்யாவிற்கு சென்று இருந்தார்.

அந்த பயணத்தின் போது, அதிபர் விளாடிமிர் புடினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். அதோடு புடினை இந்தியாவுக்கு வருமாறு அவரை அழைத்தார். இந்த நிலையில்தான் தற்போது மே 9 ஆம் தேதி ரஷ்யாவின் நடக்க உள்ள வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவிற்கு செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போர் அச்சம்
பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
90 நிமிடம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள் - ராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மோடி தந்த பவர்
தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரம் உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கையை உள்ளது,. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம், என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.
இது போன்ற சூழ்நிலையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் / ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications