சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: ஈரான் - அமெரிக்கா போரால் மேற்காசியாவில் பதற்றமான நிலை நிலவுகிறது. இதனால், நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அதை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று லோக்சபாவில் விளக்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று ராஜ்யசபாவில் விளக்கி பேசினார்.
பிரதமர் மோடி இன்று ராஜ்யசபாவில் உரையாற்றினார். ஈரான் - அமெரிக்கா போரால் மேற்காசியாவில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் மோடி அப்போது பேசினார். மோடி தனது உரையில் கூறியதாவது:-

முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது
நிலைமையை சமாளிக்கவும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும் அரசு அனைத்து வகையிலும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். இந்தப் போரின் தாக்கம் நீண்ட காலம் நீடிக்கக்கூடும். ஆனால் அரசு முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
நாட்டின் நலனே எப்போதும் முதன்மை. கொரோனா காலத்தில் செயல்பட்டது போல அனைத்து மாநிலங்களும் ஒரே அணியாக இணைந்து இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமான காலங்களில் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் எளிதில் பாதிக்கப்பட கூடிய பிரிவினரே அதிகம் பாதிக்கப்படுவர்.
ஆகவே, குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல், இத்தகைய காலங்களில் அதிகரிக்கும் கருப்புச் சந்தை நடவடிக்கைகளை மாநில அரசுகள் கடுமையாக கண்காணித்து தடுக்க வேண்டும். கொரோனா காலத்தைப் போலவே, எரிபொருள், விநியோகச் சங்கிலி, உரங்கள் உள்ளிட்ட துறைகளில் திட்டங்களை உருவாக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் அரசு ஏழு அதிகாரப்பூர்வ குழுக்களை அமைத்துள்ளது.
இந்தியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை
இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈரானிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.
இந்தப் போரில் மனித உயிர்களுக்கு ஏற்படும் எந்தவித அச்சுறுத்தலும் மனிதகுலத்தின் நலனுக்கு ஏற்றதல்ல. ஆகவே, அனைத்து தரப்பினரும் விரைவில் அமைதியான தீர்வை எட்ட இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நெருக்கடியான சூழ்நிலைகளில், நாட்டிற்குள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கே நாம் முன்னுரிமை அளிக்கிறோம்.
2 முறை பேசியிருக்கிறேன்
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். மேற்கு ஆசிய மோதல் நீடித்தாலும், இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. தடையின்றி விநியோகம் நடைபெற வலுவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூலதன பெட்ரோலியம் இருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதை 65 லட்சம் மெட்ரிக் டன்னிற்கு மேல் உயர்த்தும் திட்டமும் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு திறனும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான ஆசிய நாடுகளுடன் நான் 2 முறை பேசியிருக்கிறேன். வளைகுடா நாடுகளுடன் தொடர்பில் உள்ளோம். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்தும் அவர்களுடன் பேசியுள்ளோம்.
நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற ஒரு சர்வதேச கடல்வழியில் ஏற்படும் தடைகளும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்" என்று பிரதமர் மோடி கூறினார். ஈரான் - அமெரிக்கா போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில் பிரதமர் மோடி மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
-
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்?












Click it and Unblock the Notifications