இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு, வர்த்தகத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்காவும், அத்துடன் சேர்ந்து இஸ்ரேலும் தாக்குதல் நடத்தக்கூடும். இந்த பதற்றத்திற்கு நடுவில்தான் தற்போது பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இது பிரதமரின் இஸ்ரேலுக்கான இரண்டாவது பயணம் என்று வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது. "இப்பயணத்தின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் சந்திப்பார். இந்தியா-இஸ்ரேல் ராஜதந்திர உறவு மூலம் பெற்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு தலைவர்களும் மறுபரிசீலனை செய்வார்கள். அத்துடன், அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, விவசாயம், நீர் மேலாண்மை, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் போன்ற பல துறைகளில் மேலும் பல ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் விவாதிப்பார்கள்" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான, நீண்டகால உறவை இந்த அரசுமுறைப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், உலகளாவிய விஷயங்கள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்துப் பேசுவார். அதே நாளில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனிப்பட்ட இரவு விருந்தில் பங்கேற்பதுடன், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.
நாளை, இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அத்துடன், ஹோலோகாஸ்ட் நினைவுச் சின்னமான யாட் வாஷெமையும் பிரதமர் மோடி பார்வையிடுவார். இஸ்ரேலில் தங்கியிருக்கும்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார். மேலும், ஒரு தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியையும் பார்வையிட உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு அவர் ஜூலை 2017-ல் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications