கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி- தகுதியானவர்கள் போட்டுக்கொள்ள அழைப்பு
பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் உடனடியாக கோவிட் 19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 3,03,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,46,71,753 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 25,42,534 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு 1,11,12,056 பேர் பாதிக்கப்பட்டாலும் 1,07,84,568 பேர் குணமடைந்துள்ளனர். 157,195 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 99 சதவிகிதம் பேர் மீண்டுள்ளனர்.
நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தனது முதல் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்ட மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எய்ம்ஸில் COVID-19 தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன். COVID-19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவாக தடுப்பூசி கண்டுபிடிக்க எவ்வாறு பணியாற்றினர் என்பதை உலகம் அறியும்.
தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். கோவிட் -19 இல்லாத இந்தியாவை உருவாக்க ஒன்றிணைவோம் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications