கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி- தகுதியானவர்கள் போட்டுக்கொள்ள அழைப்பு
பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் உடனடியாக கோவிட் 19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 3,03,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,46,71,753 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 25,42,534 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு 1,11,12,056 பேர் பாதிக்கப்பட்டாலும் 1,07,84,568 பேர் குணமடைந்துள்ளனர். 157,195 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 99 சதவிகிதம் பேர் மீண்டுள்ளனர்.
நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தனது முதல் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்ட மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எய்ம்ஸில் COVID-19 தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன். COVID-19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவாக தடுப்பூசி கண்டுபிடிக்க எவ்வாறு பணியாற்றினர் என்பதை உலகம் அறியும்.
தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். கோவிட் -19 இல்லாத இந்தியாவை உருவாக்க ஒன்றிணைவோம் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications